இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன வீரர்கள் நடமாட்டம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன வீரர்கள் நடமாட்டம் குறித்து மாநிலங்களவையில் எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பாக, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின் பாஜக உறுப்பினர் ராம்தாஸ் அகர்வால் பேசியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான கில்கித்- பால்திஸ்தானில் 7 ஆயிரம் முதல் 11 ஆயிரம் சீன வீரர்கள் நிலைகொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலை குறித்து உளவுத் துறை அமைப்புகள் தெரிந்து கொள்ளாதது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். உளவுத் துறை செயலிழந்துவிட்டதா?

சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஷாங்காய் கண்காட்சியில் இந்திய வரைபடத்தை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1962-ல் நிகழ்ந்தது போன்றே மீண்டும் ஒரு முறை நிகழ வேண்டுமா? நாம் நமது கண்களை எப்போதுதான் திறக்கப் போகிறோம் என அவர் கேள்வி எழுப்பினார்.

உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "வெட்கம், வெட்கம்' என ஆவேசத்துடன் கோஷம் எழுப்பினர்.

நக்ஸல் விவகாரம் குறித்து பாஜக உறுப்பினர் ஸ்ரீகோபால் வியாஸ் பேசியதாவது:

நக்ஸல் பாதிப்புப் பகுதிகளில் கண்ணிவெடிகளில் சிக்கி நமது வீரர்கள் இறக்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார்.

பிரபாத் ஜா (பாஜக): வெடிமருந்துகளுடன் சென்ற 164 வாகனங்கள் கடந்த 2 மாதங்களில் மாயமாகி உள்ளன. அவை என்ன ஆயின என்பது குறித்து தகவல் இல்லை. அந்த வெடிமருந்துகள் நக்ஸல்கள் கைகளுக்கு சென்றிருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது என்றார் ஜா.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment