இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நாடு முழுவதும் இன்று பந்த்:டீசல் விலையுயர்வால் ரயில்களுக்கு இனி பயோடீசல்

ஜுலை 5, நாடு முழுவதும் இன்று பந்த் : டீசல் விலை உயர்வால் ரயில்களுக்கு மாற்று எரிபொருள் : இந்தியாவில் அவ்வப்போது விசம் ஏறிவரும் விலைவாசியையும், குறிப்பாக பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றத்தையும் கண்டித்து இன்று நாடு முழுவதும் ஆளும் கட்சியினரைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் மாபெரும் பந்த்-ஐ நடத்தியது. இந்த விலையேற்றத்தை மறுபரிசீலனை செய்ய இயலாது என இந்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. சமீபத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.50-ம், டீசலுக்கு ரூ.2.00-ம் ஏற்றப்பட்டது.

இந்த விலையேற்றத்தினால் ரயில்வே துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில், தற்போது இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் 51 சதவீமும், சரக்கு ரயில்களில் 37 சதவீதமும் டீசலில் தான் ஓடுகின்றன. இந்த ரயில்களுக்காக, ஆண்டுதோறும் ரூ. 4,500 கோடி செலவில் 230 கோடி லிட்டர் டீசல் வாங்கப்படுகிறது. தற்போது, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதால், ரயில்வேக்கு கூடுதலாக ரூ.460 கோடி செலவாகும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்ப்பதற்காக, மாற்று எரிபொருளான பயோ-டீசலை பயன்படுத்த ரயில்வே முடிவுசெய்துள்ளது. இதற்காக, பயோ டீசல் தயாரிக்கும் நிலையங்களை சொந்தமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பணிகள் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முடிவடையும். பயோ டீசல் மூலம் ரயில்களை இயக்கும் திட்டம் உள்ளது. இதற்குத் தேவை சில தொழில்நுட்ப மாற்றங்கள், அவ்வளவே. எனவே இந்தத் திட்டம் நிரந்தர திட்டமாக எதிர்காலத்தில் இருக்கும். இனி ரயில்களுக்கு பயோ டீசலைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயில் ஏற்படும் செலவீனம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment