தட்டை பயறு சாகுபடி விலை குறைவால் விவசாயிகள் கவலை
5:49 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 1 கருத்துரைகள் Admin
கோபி, நம்பியூர் மற்றும் டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதியில் சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முள்ளங்கி, புடலை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சமீப காலமாக அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி கொண்ட கோபி பகுதியில் விளையும் தோட்டக்கலை பயிர்கள் நல்ல சுவையும், அதிக எடையும் கொண்டதாக விளங்குவதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.பருவமழை தவறியதால், குறைந்த தண்ணீரே தேவைப்படும் தட்டை பயிர்களை கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயிரிட்டனர்.
தற்போது தட்டை பயிர் முற்றி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கோபி, சிறுவலூர், குருமந்தூர், கடத்தூர், பொலவகாளிப்பாளையம், கள்ளிப்பட்டி, துறையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தட்டை பயிர் அறுவடை தொடங்கியுள்ளது. முற்றிய தட்டை பயிரை காயவைத்து, விற்பனை செய்ய சில மாதமாகும். ஆனால் கேரளாவில் முற்றாத இளம் தட்டை பயிர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது.கேரளா மற்றும் தமிழகத்தில் முற்றாத இளம் தட்டை பயிர், பொரியலில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உடனடியாக வருமானம் கிடைப்பதால், கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள், தண்டுடன் கூடிய தட்டை பயிரை அறுவடை செய்து உடனடியாக விற்பனை செய்கின்றனர்.
கடந்த போகத்தில் ஒரு கிலோ தண்டுடன் கூடிய தட்டை பயிறு, 12 ரூபாய் வரை விற்றது.கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள அதிக விளைச்சல் காரணமாக ஒரு கிலோ தட்டை பயிர் ஆறு ரூபாயாக குறைந்து விட்டது. இதனால் அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தட்டை பயிரை பயிரிட்ட கோபி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது
Merkur Slots Machines - SEGATIC PLAY - Singapore
Merkur Slot Machines. 5 star rating. The 토토 사이트 Merkur Casino game was the first to ventureberg.com/ feature video slots in the casinosites.one entire https://tricktactoe.com/ casino, https://septcasino.com/review/merit-casino/