இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பிஏபி பாசன விவ​சா​யி​க​ளுக்கு ​ நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை

பிஏபி.​ முதல் மண்​டல பாச​னத்​தில் நஷ்​ட​ம​டைந்​துள்ள விவ​சா​யி​க​ளுக்கு இழப்​பீட்​டுத் தொகை வழங்க வேண்​டும் என்று,​​ கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

த​மிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்க நிர்​வா​கி​கள் ஆலோ​ச​னைக் கூட்​டம்,​​ உடு​மலை பாலாஜி திரு​மண மண்​ட​பத்​தில் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.​ ஜோத்​தம்​பட்டி பாசன சபை தலை​வர் பழ​னி​சாமி தலைமை வகித்​தார்.​ மருள்​பட்டி பாசன சபை தலை​வர் பால​தண்​ட​பாணி,​​ நர​சிங்​கா​பு​ரம் பாசன சபைத் தலை​வர் பால​சுப்​பி​ர​மணி ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​

நிறை​வேற்​றப்​பட்ட தீர்​மா​னங்​கள்:

ஜன.​ 22-ம் தேதி முதல் மண்​டல பாச​னத்​துக்கு தண்​ணீர் விடப்​பட்​டது.​ இந்த தண்​ணீரை நம்பி உடு​மலை,​​ மடத்​துக்​கு​ளம்,​​ பல்​ல​டம்,​​ காங்​க​யம்,​​ திருப்​பூர் வட்​டங்​க​ளில் உள்ள விவ​சா​யி​கள் மக்​காச்​சோ​ளம்,​​ வெங்​கா​யம் உள்​ளிட்ட பயிர்​களை சாகு​படி செய்​த​னர்.​ கடந்த மூன்று மாதங்​க​ளில் ஏக்​க​ருக்கு ரூ.​ 15 ஆயி​ரம் முதல் ரூ.​ 25 ஆயி​ரம் வரை செல​வு​க​ளும் செய்​துள்​ள​னர்.​ ​

இந்​நி​லை​யில் பிஏபி நிர்​வா​கம் பொறுப்​பற்ற முறை​யில் நீர் நிர்​வா​கம் செய்து வந்​த​தா​லும்,​​ காண்​டூர் கால்​வாய் உடைந்து திரு​மூர்த்தி அணைக்கு உரிய நேரத்​தில் தண்​ணீர் வந்து சேரா​த​தா​லும்,​​ பாச​னப் பகு​தி​க​ளில் உள்ள பயிர்​கள் காய்ந்து வரு​கின்​றன.​ இத​னால் ஏற்​பட்​டுள்ள நஷ்​டத்​துக்கு தமி​ழக அரசு இழப்​பீட்​டுத் தொகை வழங்க வேண்​டும்.​ ​

வி​வ​சா​யி​கள் பெற்​றுள்ள கடன்​களை தள்​ளு​படி செய்ய வேண்​டும்.​ ஆனை​மலை நல்​லாறு திட்​டத்தை உட​ன​டி​யாக நிறை​வேற்ற வேண்​டும்.​ ​

காண்​டூர் கால்​வாயை சீர​மைக்க தமி​ழக அரசு ஒதுக்​கி​யுள்ள நிதி​யில் முறை​கேடு இன்றி பணி​கள் நடை​பெற விவ​சாய சங்க தலை​வர்​கள்,​​ பாசன சங்க தலை​வர்​கள் அடங்​கிய குழுக்​களை அமைக்க வேண்​டும். இந்த கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி,​​ ஏப்.​ 12-ம் தேதி காலை 10 மணிக்கு உடு​மலை பிஏபி அலு​வ​ல​கம் முன்பு ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​ப​டும்.​ ​ மேற்​கண்ட தீர்​மா​னங்​கள் நிறை​வேற்​றப்​பட்​டன.​ தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்க மாவட்ட செய​லா​ளர் எஸ்.ஆர்.மது​சூ​த​னன்,​​ கிளு​வங்​காட்​டூர் பாசன சபை தலை​வர் ராஜ​சே​கர்,​​ ​ கண்​ணம நாயக்​க​னூர் பாசன சபை தலை​வர் செல்​வ​ராஜ் உள்​ளிட்ட 200-க்கு மேற்​பட்ட சங்க நிர்​வா​கி​கள் கலந்து கொண்​ட​னர்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment