ஒசூர், ஏப்.11: இந்தியாவில் 40 சதவீத நிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளன. மீதி உள்ள 60 சதவீத நிலங்கள் நீர்ப்பாசனவசதி பெற மத்திய அரசிடம் திட்டம் ஏதுமில்லை என இந்திய கம்
ஒசூர், ஏப்.11: இந்தியாவில் 40 சதவீத நிலங்கள் மட்டுமே நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளன. மீதி உள்ள 60 சதவீத நிலங்கள் நீர்ப்பாசனவசதி பெற மத்திய அரசிடம் திட்டம் ஏதுமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
தேன்கனிக்கோட்டையில் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் அவர் பேசியது:
மத்திய மாநில அரசுகள் விவசாய விரோதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. மத்திய அரசின் உணவுத் தானியங்கள் மீதான மானியம் ரூ.424 கோடி குறைத்துள்ளது. உரம் மீதான மானியத்தையும் குறைத்துவிட்டது.
இதனால் உரத்தின் விலை 10 சதவீதம் உயர்ந்து விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராப்புற மேம்பாட்டுக்காக மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கிய 21.06 சதவீத முதலீட்டை இந்த ஆண்டு 16.18 சதவீதமாகக் குறைத்துவிட்டது.
சுவாமிநாதன் கமிஷன் விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வழங்க வேண்டும் என கூறியதை மத்திய அரசு புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகையாக ரூ.26 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசியது:
விவசாயிகளிடம் இருந்து 75 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தொழிற்சாலைகளை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. சுதந்திரம் பெற்ற போது இந்திய மக்கள்தொகை 30 கோடியாக இருந்தது.
தற்போது அது 110 கோடியாக உயர்ந்துவிட்டது. மக்கள் தொகை பெருகி வருகிறது. ஆனால் விளை நிலங்களின் பரப்பரளவு குறைந்து வருகிறது.
எனவே தொழிற்சாலைகளுக்கு விளை நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, எம்எல்ஏக்கள் டி.ராமச்சந்திரன், குணசேகரன், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.லகுமைய்யா உள்ளிட்டோர் பேசினர்.
யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.
தேன்கனிக்கோட்டையில் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் அவர் பேசியது:
மத்திய மாநில அரசுகள் விவசாய விரோதக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. மத்திய அரசின் உணவுத் தானியங்கள் மீதான மானியம் ரூ.424 கோடி குறைத்துள்ளது. உரம் மீதான மானியத்தையும் குறைத்துவிட்டது.
இதனால் உரத்தின் விலை 10 சதவீதம் உயர்ந்து விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராப்புற மேம்பாட்டுக்காக மத்திய அரசு கடந்த ஆண்டு வழங்கிய 21.06 சதவீத முதலீட்டை இந்த ஆண்டு 16.18 சதவீதமாகக் குறைத்துவிட்டது.
சுவாமிநாதன் கமிஷன் விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வழங்க வேண்டும் என கூறியதை மத்திய அரசு புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகையாக ரூ.26 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் பேசியது:
விவசாயிகளிடம் இருந்து 75 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கியது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தொழிற்சாலைகளை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. சுதந்திரம் பெற்ற போது இந்திய மக்கள்தொகை 30 கோடியாக இருந்தது.
தற்போது அது 110 கோடியாக உயர்ந்துவிட்டது. மக்கள் தொகை பெருகி வருகிறது. ஆனால் விளை நிலங்களின் பரப்பரளவு குறைந்து வருகிறது.
எனவே தொழிற்சாலைகளுக்கு விளை நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, எம்எல்ஏக்கள் டி.ராமச்சந்திரன், குணசேகரன், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் துரைமாணிக்கம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.லகுமைய்யா உள்ளிட்டோர் பேசினர்.