இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மங்கி வரும் வெங்காய விவசாயம்

நன்றி: தினமணி

கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் அழகாகப் பூத்திருக்கும் வெங்காயச் செடிகள்.
கடலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பயிரிடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும்,​​ வேளாண் துறையின் ஆதரவு போதுமான அளவுக்கு இல்லாததால்,​​ விவசாயம் செய்வது குறைந்து போய்க்கொண்டு இருக்கிறது.​ ​தமிழ்நாட்டில் திண்டுக்கல்,​​ பழனி,​​ கரூர்,​​ நாமக்கல் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.​ 1995-க்கு முன் கடலூர் மாவட்டத்தில் கடலூர் ஒன்றியம் நாணமேடு,​​ உச்சிமேடு,​​ கண்டக்காடு,​​ உப்பளவாடி உள்ளிட்ட கிராமங்களிலும்,​​ பரங்கிப்பேட்டை,​​ புவனகிரி,​​ கீரப்பாளையம் ஒன்றியங்களிலும் சின்ன வெங்காயம் சுமார் 1000 ஏக்கர் வரை பயிரிடப்பட்டு வந்தது.ஆனால் கடலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயத்துக்கு நியாயமான விலை ​ கிடைக்காததால்,​​ பயிரிடும் பரப்பளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.கடலூரில் பயிரிடப்படும் சின்ன வெங்காயம் சாதாரண ரக சின்ன வெங்காயத்துக்கும்,​​ பெல்லாரி ரக பெரிய வெங்காயத்துக்கும் இடைப்பட்ட நடுத்தரமான அளவைக் கொண்டதாக இருக்கும்.​ எனவே மக்கள் கடலூர் நாணமேடு வெங்காயத்தை விரும்பி வாங்குவர்.​ ​சுனாமிக்குப் பிறகு கடலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சுமார் 100 ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது.​ வெங்காயம் நட்டு 100 நாள்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.​ உச்சிமேடு,​​ நாணமேடு,​​ சுபஉப்பளவாடி,​​ கண்டக்காடு,​​ தேவனாம்பட்டினம் கிராமங்களில் தற்போது வெங்காயம் பூத்துக் குலுங்கும் நிலையில் காணப்படுகிறது.கடலூர் பகுதியில் வெங்காயத்துக்கு நியாயமான விலை கிடைக்காததால்,​​ வெங்காய விதை தயாரிப்புக்காக,​​ பூவைத் துண்டிக்காமல்,​​ வெங்காயத்தையும் எடுக்காமல் விதைக்காக விட்டு விடுகிறார்கள்.​ பிற மாவட்ட விவசாயிகள் கடலூர் வந்து வெங்காய விதைகளை வாங்கிச் செல்கிறார்கள்.​ அதில் ஓரளவுக்கு கூடுதல் விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.​ ​இதுகுறித்து வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயி தேவனாம்பட்டினம் செல்வம் கூறியது:​ நாணமேடு வெங்காயம் சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.​ ஆனால் கடலூரில் வெங்காயத்துக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை.​ மற்ற இடங்களுக்கு எடுத்துச் சென்று,​​ நல்ல விலைக்கு விற்கும் சந்தை வாய்ப்பும் இல்லை.மற்ற மாவட்டங்களில் வெங்காயத்துக்கு வழங்கப்படும் சலுகைகளும் மானியங்களும் கடலூர் மாவட்டத்தில் இல்லை.தற்போது வெங்காய விதை தயாரிப்பில் பல விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.​ ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வரை விதை கிடைக்கும்.​ கடந்த ஆண்டு கடலூர் வெங்காய விதை விலை ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் வரை சென்றது.​ கடந்த சில ஆண்டுகளில் கிலோ ரூ.300-க்குக் கூட குறைந்து இருக்கிறது.​ விதை,​​ உரம்,​​ பூச்சி மருந்து போன்றவற்றுக்கு அரசு மானியம் மற்றும் சலுகைள் அளித்தால்,​​ கடலூர் மாவட்டத்தில் வெங்காயம் சாகுபடி அதிகரிக்கும் என்றார் செல்வம்.​ ​இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் அசோகன் கூறியது:​ நாணமேடு வெங்காயம் லேசான உப்பு கலந்த நிலத்தடிநீர் உள்ள கடலோர கிராமங்களில் நன்றாக வளர்கிறது.​ ​ கூடுதல் நீரைத் தன்னகத்தே கொண்டது.​ அதனால் பெரிதாக இருக்கிறது.​ மற்ற ரகங்களுடன் ஒப்பிடும்போது நாணமேடு வெங்காயத்தைக் கூடுதல் நாள்கள் சேமித்து வைக்க முடியவில்லை.கடலூர் பகுதியில் வெங்காயம் விரைவில் பூப்பதால் விதை தயாரிப்பு லாபகரமாக இருக்கும்.​ வெங்காயம் பற்றி கோவையில் ஆராய்ச்சி செய்யப்படுகிறது.​ கோ ஆன் 5 என்ற புதிய ரக வெங்காய விதை வெளியிடப்பட்டு உள்ளது.​ அது கடலூர் நாணமேடு வெங்காயத்தின் குணங்களை அதிகம் கொண்டது.​ அந்த ரகத்தை கடலூர் விவசாயிகள் பயிரிட முன்வர வேண்டும் என்றார் அசோகன்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment