இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

கடலூர்: கண் டித்து கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. தமிழக விவசாயிகள் சங்க திட்டக்குடி வட்ட மாநாடு ராமநத்தத்தில் நடந்தது. மாவட்டக்குழு சண்முகம் தலைமை தாங்கினார்.


லட்சுமணன், பரமசிவம், குமார் முன் னிலை வகித்தனர். ராமானுஜம் வரவேற்றார். கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி துவக்கவுரையாற்றினார். மாவட்ட நிர்வாகக்குழு சுப்ரமணியன், பரமசிவம், வட்ட செயலாளர் கள் மகாலிங்கம், சின்னதுரை, ராதாகிருஷ்ணன், வட்ட துணை செயலாளர் முருகையன் சங்க செயல்பாடுகள், விவசாயிகளுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து பேசினர். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். அதில் வட்ட தலைவராக ராமசாமி, துணை தலைவராக ராமானுஜம், வட்ட செயலாளராக ராதாகிருஷ்ணன், துணை செயலாளராக சண்முகம், பொருளாளராக லட்சுமணன் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், அறிவிக் கப்படாத மின் வெட்டை கண்டித்து வரும் 25ம் தேதி திட் டக்குடியிலும், 26ம் தேதி பெண்ணாடத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப் பட்டது. தீர்மானத்தை விளக்கி மாவட்ட கவுரவ தலைவர் கோவிந்தசாமி பேசினார்.கோவிந்தன் நன்றி கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment