இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சத்தியில் செண்டுமல்லி சாகுபடி அதிகரிப்பு ஆயிலாக மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி

ஈரோடு மாவட்டம் சத்தி பகுதியில் செண்டுமல்லி சாகுபடி அதிகரித்துள்ளது. இங்குள்ள ஆலை மூலம் ஆயிலாக மாற்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சத்தியமங்கலம் பகுதி விவசாயிகள் வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட ஆண்டுப்பயிரை சாகுபடி செய்து வந்தனர். விவசாயிகள் ஆண்டு முழுவதும் பராமரிப்பு செலவு செய்த பின் ஓராண்டு கழித்து வருமானம் கொடுக்கும். இதனால், விவசாயிகள் இடைக்காலங்களில் வருமானம் பெற, மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்கின்றனர். தற்போது விவசாயிகள் அதிகம் தேர்வு செய்துள்ள பயிர் செண்டுமல்லி. செண்டு மல்லி விதைத்து 20 நாட்களில் நாற்று வளர்ந்து விடும். வளர்ந்த நாற்றுக்களை ஒரு ஏக்கருக்கு 18 ஆயிரம் நாற்றுகளாக பிரித்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்யப்பட்ட 60 நாட்களில் பூப்பிடித்து பலன்கொடுக்க துவங்கி விடும். பின்னர் நூறு நாட்கள் வரை தொடர்ந்து பலன் கொடுக்கும். கோடைகாலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் முதல் 20 டன் வரை மகசூல் கொடுக்கிறது. குளிர் காலங்களில் செடி சிறுத்து ஏக்கர் ஒன்றுக்கு எட்டு முதல் பத்து டன் வரை மகசூல் கொடுக்கிறது.

சத்தியமங்கலம் புதுவடவள்ளியில் உள்ள "ஏ.வி.டி., செண்டுமல்லி' நிறுவனத்தினர், செண்டுமல்லியை மொத்தமாக கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி, ஆயிலாக மாற்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.செண்டுமல்லியின் பவுடர், மருந்து தயாரிக்க உதவுகிறது. இதன்மூலம் தயாரிக்கப்படும் மாத்திரை கண் பாதிப்பை குணமாக்குகிறது. மேலும் செண்டுமல்லியை பொடியாக்கி அதை கோழித்தீவனத்தில் கலந்தால், கோழியின் முட்டை மஞ்சள் கரு அடர்த்தியாக உள்ளதாகவும், கோழி இறைச்சி மஞ்சள் தடவியதுபோல் மாறுவதால், இதை இறைச்சி பிரியர்கள் விரும்புவதாகவும் கூறுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் முக்கிய பூவாக செண்டுமல்லி கருதப்படுகிறது. இதனால், கர்நாடகா வியாபாரிகளும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். தற்போது கிலோ ஒன்று நான்கு முதல் எட்டு ரூபாய் வரை விற்பனையாகிறது. ஏக்கர் ஒன்றுக்கு பராமரிப்பு செலவாக பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. சத்தியமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செண்டுமல்லி பயிரிடப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment