இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

.வெங்காய விவசாயிகளுக்கு நஷ்டம்

ஈரோடு மாவட்டம் கெம்மநாயக்கன்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. வெங்காய செடிக்கு அதிக குளிரும், அதிக வெப்பமும் ஒத்து போகாது. பருவநிலை மாற்றத்தால் வெங்காய செடிகள் கருகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. கார்த்திகையில் நட்ட வெங்காய செடிகளை 90 நாள் விளைச்சலுக்கு பின் மாசி மாதம் அறுவடை செய்தனர். பல ஏக்கர் செடிகளை இழந்து விட்டாலும் மீதமுள்ளவற்றை ஆறுதலுக்காக அறுவடை செய்தனர். இதனால் விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட்டது.



ஒரு ஏக்கர் வெங்காய விளைச்சலுக்கு 30 ஆயிரம் செலவாகியது. அறுவடைக்கு வரும் கூலியாட்களுக்கு ஒரு நாள் கூலி 100 ரூபாய். செலவு செய்தும் அறுவடையின் போது நஷ்டம் தான் மிஞ்சுகிறது. வெளியூரில் இருந்து வரும் தரகர்கள் வெங்காயம் சிறுவெட்டாக இருந்தால் கிலோ ஐந்து ரூபாய்க்கும், பெரியவையாக இருந்தால் ஏழு ரூபாய்க்கும் குறைந்த விலை பேசி வாங்கி செல்கின்றனர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment