இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

சர்க்கரை சாப்பிடாததால் யாரும் சாக மாட்டார்கள்!​​: பவார் கட்சி பத்திரிகை தலையங்கம்

"சர்க்கரை​ சாப்​பி​டாவிட்டால் யாரும் செத்துவிட மாட்டார்கள்,​​ சர்க்கரையை ஏன்தான் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள் என்றே தெரியவில்லை,​​ சர்க்கரை அப்படியே விலை ஏறினால்தான் என்ன,​​ அதனால் குடியா முழுகிவிடும்?'' என்று ஒரு பத்திரிகையில் தலையங்கமே தீட்டப்பட்டிருக்கிறது.​ ​அந்தப் பத்திரிகையின் பெயர் ராஷ்டிரவாதி.​ சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படுவது.​ அதன் நிர்வாக ஆசிரியர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் மதுகர் பிச்சட்.​ பத்திரிகை ஆசிரியர் சுதிர் போங்கலே."சர்க்கரை,​​ உப்பு,​​ அரிசி போன்ற வெண் பண்டங்கள் விஷத்துக்குச் சமம்,​​ எனவே 40 வயதுக்கு மேல் போனால் இவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.​ சர்க்கரை வியாதி வந்தவர்கள் எந்த வகையிலும் சாப்பாட்டிலும் பானத்திலும் சர்க்கரையை அறவே சேர்த்துக் கொள்வதே இல்லை.​ மனிதனுக்கு சர்க்கரை அத்தியாவசியமான உணவுப் பண்டமே அல்ல.​ அதன் விலை ஏறிவிட்டது என்று ஏன்தான் இப்படி கூரை மீது நின்று இப்படி கூப்பாடு போடுகிறார்கள் என்றே தெரியவில்லை.​ சராசரியாக இந்தியர்களின் மாதச் செலவில் சர்க்கரை உள்ளிட்ட சாப்பாட்டுச் செலவு 10% முதல் 15% வரைதான் இருக்கும்.பெட்ரோல், ​​ டீசல்,​​ கார்,​​ பைக்,​​ அழகு சாதனங்கள்,​​ சினிமா -​ டிராமா,​​ விளையாட்டு,​​ டி.வி.,​​ பிரிட்ஜ் போன்றவற்றஉக்காகும் செலவு உயரும்போதெல்லாம் கூக்குரல் எழுப்பாதவர்கள் இந்த சர்க்கரைக்கு மட்டும் ஏன் இப்படி கூட்டமாக கூச்சல் எழுப்புகிறார்கள் என்று தெரியவில்லை.சர்க்கரை வியாதிக்காரர்கள் சர்க்கரையே சாப்பிடாமல் இருக்கவில்லையா?​ மற்றவர்களும் இதைப் பின்பற்றி சர்க்கரையே வேண்டாம் என்று ஒதுக்கலாமே?​ ​சர்க்கரை கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய்வரை உயர்ந்தால்தான் என்ன?​ 4 அல்லது 5 பேர் கொண்ட குடும்பத்துக்குக் கூடுதலாக 60 ரூபாயோ 90 ரூபாயோ தானே செலவாகப் போகிறது?​ இதைத் தாங்கிக் கொள்ளக்கூடாதா?ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்ட பிறகு மத்திய,​​ மாநில அரசுகளின் ஊழியர்களுடைய சம்பளம் அதிகரித்த அளவோடு ஒப்பிடும்போது இந்த சர்க்கரை விலையேற்றம் ஒரு பெரிய விஷயமா?​ ​சர்க்கரை விலை உயர்வால் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன என்பதெல்லாம் வெறும் பேச்சு' என்கிறது அந்த தலையங்கம்.சுமார் ஓராண்டுக்கு முன்பு கிலோ 22 ரூபாயாக வெளிச் சந்தையில் விற்கப்பட்ட சர்க்கரை இப்போது கிலோ ரூ.42 முதல் ரூ.43 வரை விற்கப்படுகிறது.​ இது நாடு முழுக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.​ இது காங்கிரஸôரையும் எட்டியிருக்கிறது.​ எனவே அவர்கள் உணவுத்துறை அமைச்சரான சரத் பவாரை,​​ விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.​ எனவே காங்கிரஸôர் மீதுள்ள கோபத்தை இப்படி தலையங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறது தேசியவாத காங்கிரஸ் கட்சி.​ ​விலைவாசி உயர்வுக்கு சரத் பவார் மட்டுமே காரணம் அல்ல என்று அவருடைய கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரபுல் படேல் தில்லியில் நிருபர்களிடம் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.​ பிரதமரும் மத்திய அமைச்சரவையும்கூட இதற்கு பொறுப்பு என்பதே அவருடைய பதிலுக்கு அர்த்தம்.​ எனவே பவாரை பலிகடா ஆக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் தேசியவாத காங்கிரஸôருக்கு எழுந்திருப்பது இந்த தலையங்கத்திலிருந்து தெரிகிறது.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment