இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி.​ கத்தரிக்காய் மீண்டும் வருமா?,​​ வேதனை தருமா?

பி.டி.கத்தரிக்காயை எதிர்த்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு இயக்கம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.​ ​தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் "பி.டி.​ கத்தரிக்காய் மீண்டும் வருமா?​ வேதனை தருமா?' எனும் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.​ ​பி.டி.கத்தரிக்காய் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண்மை ஆராய்ச்சியாளர் வெ.ராஜதுரை பேசியது:பி.டி.​ கத்தரிக்காயால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.​ மரபணு விதை கத்தரிக்காயால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.3 மாதங்கள் மட்டுமே ஆய்வு செய்து விட்டு,​​ அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயலுகின்றனர்.​ மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு கத்தரிக்காயை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்.​ பி.டி.​ கத்தரிக்காய் தொடர்பாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.​ வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இக்கத்தரிக்காய் பயன்பாட்டில் இல்லை.​ பிடி கத்தரிக்காய் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என்றார் ராஜதுரை.மாவட்ட துணைத் தலைவர் சோலை பழனி தலைமை தாங்கினார்.​ ஒன்றியச் செயலர் இல.அழகேசன்,​​ ஒன்றியத் தலைவர் பி.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்: , , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment