இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெல் கொள்முதல் ​நிலையம்​ மீது முறை​கேடு புகார்

தஞ்சாவூர் மாவட்டம்,​​ பாபநாசம் வட்டம்,​​ தேவராயன்பேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடைபெறுவதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.​ சண்முகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.​ ​ இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு மூட்டைக்கு ரூ.​ 10-ம்,​​ வியாபாரிகள் எடுத்துவரும் நெல்லுக்கு மூட்டைக்கு ரூ.​ 15-ம் கட்டாய வசூல் செய்வதாக,​​ தேவராயன்பேட்டை நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்மீது விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.​ ​ மேலும்,​​ நெல் தூற்றுவதற்கு மூட்டைக்கு ரூ.​ 3 வசூலிப்பதாகவும் இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.​ மூட்டைக்கு 40 கிலோ என்ற அளவில் எடையிடாமல் கூடுதலாக 2 கிலோ அதிகரித்து,​​ மூட்டைக்கு 42 கிலோ வரை எடையிடுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​ இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறியது:​ ​ விதிமுறைகளுக்குப் புறம்பாக இப்படி செய்கிறீர்களே எனக் கேட்டால்,​​ அங்குள்ள ஊழியர்கள் அலட்சியமாகப் பதில் கூறுகின்றனர்.​ ​ எனவே,​​ இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் நேரடி ஆய்வு செய்து,​​ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment