இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பலாவில் பூச்சிச் தாக்குதல்: விவசாயிகள் வேதனை

பூச்சித் தாக்குதல் காரணமாக பலா மரத்தில் உள்ள பிஞ்சுகள் பாதிப்படைந்து சொத்தை விழுந்து வருவதால் பண்ருட்டி பகுதி பலா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி,​​ கடலூர்,​​ விருத்தாசலம் பகுதியில் சுமார் 29 ஆயிரம் ஹெக்டர் நிலப் பரப்பளவில் முந்திரிக்காடுகள் உள்ளன.​ குறிப்பாக பண்ருட்டி வட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் பரந்துள்ள முந்திரிக் காடுகளுக்கு இடையேயும்,​​ வீட்டுத் தோட்டத்திலும் பலா மரங்கள் வளர்க்கப்படுகின்றன.மண் வளமும்,​​ தட்பவெப்ப நிலையும் சாதகமாக அமைந்துள்ளதால் பண்ருட்டி பகுதியில் பலா மரம் செழித்து வளர்வதுடன்,​​ பழமும் மிக சுவையாக இருக்கும்.​ இதனால் பண்ருட்டி நகரம் பலா பழத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது.மேலும் இப்பகுதியில் விளையும் பலாப் பழங்கள் சென்னை,​​ ஆந்திரம்,​​ பெங்களூர்,​​ மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.​ பலா பிஞ்சுகளில் பூச்சி மற்றும் பூஞ்சான நோய் தாக்கம் எப்போதும் இல்லாத அளவு தற்போது அதிகம் காணப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகளிடம் விசாரித்ததில் அவர்கள் கூறியது:​ போதிய இடைவெளியுடன் அண்மையில் பெய்த கனமழையால் மண் ஈரப்பதமாக காணப்படுவதால் காய்ப்பு தன்மை குறைய வாய்ப்புள்ளது.​ மேலும் தற்போதைய கடுமையான பனிப்பொழிவு காரணமாக பிஞ்சில் பூச்சி மற்றும் பூஞ்சாண நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.​ இதனால் கருகி விழுவதுடன்,​​ சொத்தை விழுவதால் மகசூல் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.இது குறித்து பண்ருட்டி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் கூறியது:​ பண்ருட்டி பகுதியில் பலா மானாவாரியாகவும்,​​ இறவையிலும் சாகுபடி செய்யப்படுகிறது.​ தற்போது பலா பூ மற்றும் காய் பிடிக்கும் நிலையில் உள்ளது.​ சீதோஷ்ண நிலை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூஞ்சாண மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.​ பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது பைட்டோலான் அல்லது டைத்தேன் எம்:45 இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும் என வி.ராமலிங்கம் கூறினார்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment