பணி நிரந்தர சட்டம்: தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி
4:25 PM சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி 0 கருத்துரைகள் Admin
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தொழிலாளர் நலன்களைக் காக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர் பணி நிரந்தரம்) சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.சில தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கவும் இந்த சட்டத்தின் 9}வது பிரிவில் வகை செய்யப்பட்டிருந்தது.இந்தப் பிரிவின் படி, தேயிலைத் தோட்டங்களின் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு மனு அனுப்பப்பட்டது.ஆனால், இந்த மனுவை தமிழக அரசு 01.08.2000}ல் நிராகரித்தது.இதை எதிர்த்து மூணாறில் உள்ள டாடா தேயிலை நிறுவனம், மணிமுத்தாறு எஸ்டேட்டில் உள்ள பம்பாய் பர்மா தொழில் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.""தேயிலைத் தோட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே செய்யப்படும் தொழில் ஆகும். இதில், தொழிலாளர்கள் தாற்காலிகமாக மட்டுமே பணிபுரிகின்றனர். எனவே, பணி நிரந்தர சட்டத்திலிருந்து தேயிலைத் தோட்ட நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்'' என்று அவற்றில் கோரப்பட்டது.நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.இந்த வழக்கில் தொழிலாளர் தரப்பில் சரவண பவன், ஜார்ஜ் வில்லியம்ஸ், சரவண வேல் உள்ளிட்டோர் ஆஜராயினர்.விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்கள் கோரிய நிவாரணத்தை அளித்தால், காலனி ஆதிக்கத்தின் போது தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட நிலையே மீண்டும் ஏற்படும்; தொழில்கள் மீதுள்ள சமூகக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விடும்.தொழிலாளர்களுக்கு உரிமையை மறுக்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளபடி செய்யப்படுகிறது.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான பணி நிரந்தரப் பலன்கள், இந்த வழக்கின் மூலம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகை தொழிலாளர்கள் நல நிதிக்கு 4 வாரங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது