அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது பி.டி.கத்திரிக்காய்க்கு தமிழகத்தில் இடமில்லை-கி.வீரமணி
8:27 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin
தி.க. தலைவர் கி.வீரமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
வேளாண்மைத் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்கிறோம் என்று கூறி, மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை இந்தியாவுக்குள் புகுத்தும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் முயற்சி, மனித குலத்தின் நல்வாழ்வுக்கு விடப்படும் அறைகூவல். பிடி கத்திரிக்காய் என்பதற்கு இங்கே இடமில்லை. தமிழக அரசு அதை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
காப்புரிமை என்ற பெயரால் அமெரிக்காவின் சுரண்டலை தடையின்றி நடத்திட நாம் அனுமதிக்கக் கூடாது. நம் ஊரில் முப்பாட்டிகள் காலத்தில் இருந்தவைகளைக்கூட மற்றவர் காப்புரிமை சொந்தம் கொண்டாடுவதை, நாம் ஒருபோதும் விட்டு கொடுக்கக் கூடாது.
இதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் விவசாயிகளும் விழிப்புணர் வுடன் செயலாற்ற வேண்டும்.
வேளாண்மைத் துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்கிறோம் என்று கூறி, மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை இந்தியாவுக்குள் புகுத்தும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் முயற்சி, மனித குலத்தின் நல்வாழ்வுக்கு விடப்படும் அறைகூவல். பிடி கத்திரிக்காய் என்பதற்கு இங்கே இடமில்லை. தமிழக அரசு அதை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
காப்புரிமை என்ற பெயரால் அமெரிக்காவின் சுரண்டலை தடையின்றி நடத்திட நாம் அனுமதிக்கக் கூடாது. நம் ஊரில் முப்பாட்டிகள் காலத்தில் இருந்தவைகளைக்கூட மற்றவர் காப்புரிமை சொந்தம் கொண்டாடுவதை, நாம் ஒருபோதும் விட்டு கொடுக்கக் கூடாது.
இதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் விவசாயிகளும் விழிப்புணர் வுடன் செயலாற்ற வேண்டும்.
குறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு
பகிர்தல் மிக எளிமையானது,அழகானது