இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பயிர்க் காப்பீடு இழப்பீடு இறுதித் தவணை விடுவிப்பு


தஞ்சாவூர்,​​பயிர்க் காப்பீடு இழப்பீட்டில் மத்திய அரசின் பங்கிற்கான இறுதித் தவணை தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.​ ​ இதுகுறித்து இந்திய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவன தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.​ பழனியப்பன் புதன்கிழமை தெரிவித்தது:​ ​ 2008-2009 சம்பா-​ தாளடி பருவத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேர்ந்த 69,224 விவசாயிகளுக்கு ரூ.​ 82.58 கோடி இழப்பீட்டுத் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.​ ​​ ​ ​ இதில் மாநில அரசின் பங்குத் தொகையான 50 சதம் முதல் தவணையாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.​ மத்திய அரசின் பங்கான 50 சதத்தில் முதல் தவணையாக 25 சதமும்,​​ இரண்டாம் தவணையாக 15 சதமும் வழங்கப்பட்டது.​ மீதமுள்ள 10 சதமான ரூ.​ 8.2 கோடியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது.​ ​ இதற்கான காசோலை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.​ ஓரிரு நாளில் இவை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.​ ​​ ​ கடந்த ஆண்டு மழைக் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை மே மாதம் இறுதியில் வழங்கப்படும்.​ இதுகுறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் பழனியப்பன்.

குறிச்சொற்கள்: , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment