இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பிப்.​ 20 ஆர்ப்பாட்டம்; ​மார்ச் 1-ல் மறியல்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்ச் 1-ம் தேதி மாநில அளவிலான மறியல் போராட்டம் நடத்தவுள்ளது.மேலும், ​​ வரும் 20-ம் தேதி பால்கூட்டுறவு சங்கங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.​ நாமக்கல்லை அடுத்த வையப்பமலையில் வியாழக்கிழமை நடந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​ இக் கூட்டத்துக்கு,​​ மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.​ கந்தசாமி தலைமை வகித்தார்.​ மாநிலச் செயலர் ஏ.எம்.​ முனுசாமி,​​ போராட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.​ மாவட்ட நிர்வாகிகள் பெருமாள்,​​ ஆதிநாராயணா,​​ ரங்கசாமி,​​ பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முத்துசாமி,​​ மாரிமுத்து உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.பின்னர்,​​ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:விவசாயிகளின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,​​ நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்,​​ பல ஆண்டுகளாக குடியிருக்கும் நபர்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சைக்கிள் பிரசாரம்,​​ நடைபயணம்,​​ கிராமக் கூட்டங்கள்,​​ பேரணி ஆகியவை நடத்தப்படும்.​ இதன் தொடர்ச்சியாக,​​ மார்ச் 1-ம் தேதி மாநில அளவில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.​ நாமக்கல் மாவட்டத்தில்,​​ ராசிபுரம்,​​ திருச்செங்கோடு,​​ பரமத்தி வேலூர்,​​ கொல்லிமலை,​​ நாமக்கல் ஆகிய 5 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.பசும்பால் கொள்முதலில் லிட்டருக்கு ரூ.​ 5-ம்,​​ எருமைப் பால் கொள்முதலில் லிட்டருக்கு ரூ.​ 8-ம் உயர்த்தி வழங்க வேண்டும்.​ கால்நடைகளுக்கான தீவனங்கள் மானியவிலையில் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.​ கறவை மாடுக்கு மானிய கடன் வழங்க வேண்டும்,​​ பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,​​ சங்க நிர்வாக செலவுக்காக லிட்டருக்கு ரூ.​ 1 மானியமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பால் கூட்டுறவு சங்கங்கள் முன்பாக கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.​ இக் கோரிக்கைகளுக்காக மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.​ மேலும்,​​ கரும்புக்கு டன்னுக்கு ரூ.​ ​ 2 ஆயிரம் வழங்கக்கோரி மதுரையில் வரும் 7-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் திரளாக பங்கேற்பது,​​ மரபணு மாற்ற கத்திரிக்காயை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசை அறிவிக்க வலியுறுத்தி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment