இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

நெற்பயிரில் நோய்த் தாக்குதல்: 1000 ஏக்கர் விவசாயம் பாதிப்பு




​ ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்களில் நோய்த் தாக்கி சுமார் 1000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் ​ ஆட்சியரிடம் புகார் செய்தனர்.
​ ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நயினார்கோயில் ஒன்றியம் பொட்டகவயல்,​​
நெடுந்துளசி,​​ உகமை,​​ திருவாடானை தாலுகா மணக்குடி ஊராட்சி கண்ணரேந்தல் கிஉள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நோய்தாக்கிய நெற்பயிர்களுடன் கூட்டத்துக்கு வந்து ஆட்சியரிடம் புகார் செய்தனர்.​ பின்னர் அவர்கள் கூறியதாவது:
​ இந்நோய் தாக்குதல் பற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை.​ விவசாயிகளை அதிகாரிகள் தொடர்ந்து அலைய விட்டார்களே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
​ கைத்தெளிப்பான்,​​ விசைத்தெளிப்பான் தருமாறு கேட்டால் மார்ச் மாதம் தான் தருவோம் என்று தெரிவிக்கின்றனர்.
​ நெற்பயிர் நோய்த் தாக்குதலால் ஏராளமான கிராமங்களில் விவசாயம் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது.​ எனவே,​​ இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.​​ ​ ​

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment