இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பயிர்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்

2009-2010-ம் ஆண்டு "ராபி' பருவப் பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் சி.​ அன்பரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:​ ""தேசிய வேளாண் காப்பீடுத் திட்டத்தின் மூலம் அனைத்து விதமான உணவுப் பயிர்கள் ​(தானியங்கள்,​​ சிறு தானியங்கள்)​ பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள் மற்றும் வணிக தோட்டக்கலைப் பயிர்கள் காப்பீடுசெய்யப்படுகின்றன.​ இதில்,​​ ​ நெல்,​​ கேழ்வரகு,​​ சோளம்,​​ கம்பு,​​ நிலக்கடலை,​​ எள்,​​ உளுந்து.​ கொள்ளு,​​ பருத்தி,​​ கரும்பு,​​ உருளைக்கிழங்கு,​​ வாழை,​​ மிளகாய்,​​ மரவள்ளிக்கிழங்கு,​​ மஞ்சள் வெங்காயம் ஆகிய பயிர்களும் அடங்கும்.​ அனைத்து விதமான இயற்கைச் சீற்றங்களினால் ​(வெள்ளம்,​​ வறட்சி,​​ பூச்சித் தாக்குதல் மற்றும் நோய்கள்)​ ஏற்படும் மகசூல் இழப்புக்கு இத்திட்டத்தில் காப்பீடு பெறலாம்.​ மேலும்,​​ குத்தகைதாரர்,​​ வங்கி கடன் பெறுவோர் மற்றும் கடன் பெறாதோர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.​ சராசரி மகசூலின் 150 சதம் மதிப்பு வரை காப்பீடுசெய்யலாம்.​ இத்திட்டத்தில் கடந்த 2000 முதல் 2008 வரை விவசாயிகளிடமிருந்து பிரிமியமாக ரூ.​ 116 கோடி பெறப்பட்டு,​​ இழப்பீடாக ரூ.​ 1171 கோடி அளிக்கப்பட்டுள்ளது.​ இத்திட்டத்தில் 8 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.​ கடந்த ஆண்டில் தமிழகத்தின் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.​ 651 கோடி தொகை நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.​ இந்நிலையில்,​​ நிகழாண்டில் "ராபி' பருவத்துக்கான பயிர்க் காப்பீடு இப்போது செய்யப்படுகிறது.​ அரசு மானியம் போக ஒரு ஏக்கருக்கு செலுத்த வேண்டிய காப்பீட்டுக் கட்டணம்,​​ கடைசி தேதி குறித்த விவரம் வருமாறு:​ நெல் ​(நவரை,​​ கோடை):​ கடன் பெறும் விவசாயிகள் :​ கட்டணம் ரூ.​ 330,​ கடைசி தேதி ​ 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகள்:​ ​ கட்டணம் ரூ.​ 330,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 336.​ ​ கடைசி தேதி 15.3.2010.​ கம்பு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 236,​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 236,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 262,​ கடைசி தேதி 15.1.2010.​ ​ ​சோளம்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 181.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 181,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 201.​ கடைசி தேதி 15.1.2010.கேழ்வரகு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 179.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.​ 179.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 199,​ கடைசி தேதி 15.1.2010.மக்காச்சோளம்: ​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 49.​ கடைசி தேதி 31..3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 49.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 54.​ கடைசி தேதி 15.1.2010.நிலக்கடலை:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 476.​ கடைசி தேதி:​ 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 476.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 528,​ கடைசி தேதி 15.1.2010.எள்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 167.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 167.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 185.​ கடைசி தேதி 15.1.2010.சூரியகாந்தி:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 436,​ கடைசி தேதி 31.1.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு கட்டணம் ரூ.​ 436.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 484.​ கடைசி தேதி 15.1.2010.உளுந்து:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 21,​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 21.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 23.​ கடைசி தேதி 15.2.2010.பச்சைப்பயறு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 124.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 124.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 138.​ கடைசி தேதி 15.2.2010.கொள்ளு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 105.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.​ 105.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 116,​ கடைசி தேதி 15.1.2010.பணப் பயிர் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள்:நெல், ​​ தரிசில் பருத்தி:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 1684.​ கடைசி தேதி ​ 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் - சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ 1684,​ மற்ற விவசாயிகளுக்கு ரூ 1871,​ கடைசி தேதி 15.2.2010.பருத்தி: ​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 649.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 649.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 721.​ கடைசி தேதி ​ 15.1.2010.மிளகாய்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 574.​ கடைசி தேதி 31.3.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 574.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 638.​ கடைசி தேதி 15.1.2010.வாழை:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 7,​ 411.​ கடைசி தேதி 28.2.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 7,​ 411.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ 8,234.​ கடைசி தேதி 15.1.2010.மரவள்ளி:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 2,​ 200.​ கடைசி தேதி 28.2.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 2,​ 200.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 2,​ 444,​ கடைசி தேதி 15.1.2010.வெங்காயம்:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 938.​ கடைசி தேதி 31.1.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 938.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ ​ 1042.​ கடைசி தேதி 15.1.2010.கரும்பு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 788.​ கடைசி தேதி 31.12.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு,​​ குறு விவசாயிகளுக்கு ரூ.​ 788.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 876.​ கடைசி தேதி 31.10.2010.உருளைக்கிழங்கு:​ கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூ.​ 410.​ கடைசி தேதி 30.6.2010.​ கடன் பெறாத விவசாயிகள் -​ சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.​ 410.​ மற்ற விவசாயிகளுக்கு ரூ.​ 456.​ கடைசி தேதி 15.4.2010.​ ​ இதில்,​​ மக்காச்சோளம்,​​ உளுந்து ஆகிய பயிர்களுக்கு உத்தரவாத மகசூல் கணக்கிடப்படும்.​ தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு வட்டாரத்திலும் பிர்காவிலும் மாநில அரசின் வேளாண் துறையினரால் பயிர் அறுவடைக் காலத்தில் ​(16-10) பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு,​​ நடப்பு பருவத்தின் சராசரி மகசூலை கடந்த 3 அல்லது 5 ஆண்டு கால உத்தரவாத மகசூலோடு ஒப்பிடும்போது நடப்புப் பருவத்தின் மகசூல் எந்த அளவு குறைந்துள்ளதோ அந்த விகிதப்படி அவ்வட்டாரத்தில் உள்ள,​​ காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் காப்பீடு செய்த தொகைக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படும்.​ பயிர் கடன் பெறாத விவசாயிகள் முன்மொழிவுப் படிவத்துடன் கணினி சிட்டா அல்லது அடங்கல்,​​ கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று ​தாம் ​ சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பிரிமியத்தை குறிப்பிட்ட தேதிக்கு முன் செலுத்த வேண்டும்.​ முன்மொழிவுப் படிவங்களை வேளாண் துறையினரிடமும் கூட்டுறவை வர்த்தக வங்கிகளிலும் பெறலாம்.​ மேலும் விவரங்களுக்கு 044-42051349,​ 42051350 ஆகிய தொலைபேசி எண்ககளுக்கும் 99403 26750,​ 93809 31331 ஆகிய செல்பேசி எண்களுக்கும் தொடர்புகொள்ளலாம்.''

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment