இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

துவங்கியது மக்காச்சோளம் அறுவடை!




உடுமலை,ஜன.7: உடுமலை வட்டத்தில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.​ 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.900 ற்கு விற்கும் நிலையில் ரூ.1000 மாக உயருமா என விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.உடுமலையில் நடப்பாண்டில் சுமார் 40 முதல் 50 ஆயிரம் ஏக்கர்கள் வரை ​விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டுள்ளனர்.​ 120 நாட்கள் பயிரான ​மக்காச்சோளத்தை கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் விவசாயிகள் ​பயிரிட்டிருந்தனர்.​ கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் மக்காச்சோளத்தில் புழுக்கள் தோன்றியதாலும்,​​ ஒரு சில தோட்டங்களில் ஒரே செடியில் 5,6 கதிர்கள் முளைத்ததாலும் விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்குமா என அச்சம் அடைந்திருந்தனர்.பொதுவாக உடுமலை,​​ பல்லடம்,​​ திருப்பூர்,​​ பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கோழிப்பண்ணைகளுக்கும் மற்றும் கால்நடை தீவன உபயோகத்திற்கும் ஆண்டு முழுவதும் மக்காச்சோளம் தேவை இருந்து வருகிறது.​ இந்நிலையில்,​​ ஜனவரி முதல் வாரத்தில் விவசாயிகள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் மக்காச்சோள அறுவடையை துவக்கி உள்ளனர்.​ ஒரு ஏக்கருக்கு சராசரியாக 35 முதல் 40 மூட்டை கள் ​(ஒரு மூட்டைக்கு 100 கிலோ)​ அறுவடையாகி வரும் நிலையில் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகளிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.​ உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி ஒரு மூட்டை 880-910 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.​ கடந்த ஆண்டு இந்த பருவத்தில் விலை ஏறுமுகமாக இருந்ததால் மக்காச்சோளத்திற்கு இந்த ஆண்டும் ஏறுமுகமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு சில விவசாயிகள் அறுவடையை தள்ளிப்போட்டு வருகின்றனர்.​ ​மேலும்,​​ நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு விட்டதால் கூலியாட்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.இது குறித்து உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ​ஜி.நஞ்சப்பன் வியாழக்கிழமை கூறியது:பொதுவாக ஜனவரி,​​ பிப்ரவரி மாதங்கள் மக்காச்சோள சீசன் ஆகும்.​ கூலி ஆட்கள் ​பற்றாக்குறையாலும்,​​ விலை ஏறும் என விவசாயிகள் எதிர்பார்த்து வருவதாலும் ​ பொங்கலுக்குப் பிறகு தீவிர அறுவடை பணிகள் நடக்கும் எதிர்பார்க்கிறோம்.​ ​ ஆனாலும் புதன்கிழமை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 480 மூட்டை ​ வந்துள்ளது.​ இந்த சீசனில் இதுவரை 2500 மூட்டைகள் இங்கு வந்துள்ளது.​ ​வியாழக்கிழமை நிலவரப்படி 100 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ.900 வரை விலை போனது.​ பொதுவாக கோழிப்பண்ணைகளுக்கு ஆண்டுதோறும் தேவைகள் இருப்பதால் விவசாயிகளுக்கு உறுதியாக இந்த விலை கிடைக்கும்.​ ​இந்த விலை போதாது என்று நினைக்கும் விவசாயிகளுக்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் இருப்பு வைத்துக் கொள்ள பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.​ ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் உள்ள 10 குடோன்களில் 4500 மூட்டைகள் வைத்துக் கொள்ள வசதி உள்ளது.​ விவசாயி கள் ஸ்டாக் வைக்கும் மக்காச்சோள மதிப்பில் 50 சதவிகித கடன் தொகை வெறும் 5 சதவிகித வட்டிக்கு வழங்கப்படுóம.​ இதில் முதல் 15 நாட்கள் இலவசமாக ஸ்டாக் வைத்துக் கொள்ளலாம்.​ இந்த திட்டம் ​விவசாயிகளுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்காச்சோளம் இருப்பு வைத்துக் கொள்ள ஒரு குவிண்டாலுக்கு வெறும் 5 பைசா கொடுத்தால் போதும்.​ எவ்வளவு மக்காச்சோளம் கொண்டு வந்தாலும் இருப்பு ​வைத்துக் கொள்ளலாம்.​ அதற்கு இலவசமாக காப்பீடும் செய்து தரப்படும் என்றார்

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment