இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

கரூர் ஆட்சியரகத்தில் தானியங்கி வானிலை நிலையம்



கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தானியங்கி வானிலை நிலையம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.​ ​ கரூர் மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 4 தானியங்கி வானிலை நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.​ இதன் தொடர்ச்சியாக,​​ கரூர் ​ மாவட்ட ஆட்சியரகத்தில் 5-வது தானியங்கி வானிலை நிலையத்தை ஆட்சியர் ஜெ.​ உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார்.​ ​ அப்போது,​​ அவர் கூறியது:​ ​ தமிழகத்தில் முதல்கட்டமாக 224 வட்டாரங்களில் தானியங்கி வானிலை நிலையங்களை தமிழக அரசு ரூ.1,690 லட்சத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நிறுவியுள்ளது.​ ​ இதன் மூலமாக குறுகிய கால வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதன் மூலம்,​​ பண்ணை முடிவுகளை எடுக்க விவசாயிகளுக்கு உதவுகிறது.​ பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு குறுகிய கால இடைவெளியில் மழையளவைக் கண்டறியப் பயன்படுகிறது.​ புவி வெப்பமயமாதல்,​​ கால நிலை மாற்றங்களைக் கண்காணிக்க வானிலை வலையிணைப்பை உருவாக்குகிறது.​ ​ பயிர் மேலாண்மைக்குத் தேவையான காலநிலை காரணிகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் உழவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு குறையும்.​ வட்டார அளவில் தானியங்கி வானிலை நிலையங்களை அமைத்து,​​ சிறந்த வானிலை வலை இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் தகுந்த வானிலை சார்ந்த வேளாண் உத்திகளைக் மேற்கொண்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.​ ​ கரூர் மாவட்டத்தில் தலா ரூ.​ 6.75 லட்சத்தில் காகிதபுரம்,​​ ஆட்சியரகம்,​​ இனுங்கூர்,கணக்குபிள்ளையூர் தென்பாகம்,​​ க.பரமத்தி ஆகிய 5 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ இந்த ​ நிலையங்கள் மூலம் காற்றின் வெப்பம்,​​ ஈரப்பதம்,​​ காற்றின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை,​​ ஈரப்பத சதத்தை அளவிட முடிகிறது.​ இந்த வானிலை நிலையத்தில் மழையளவுமானி,​​ காற்றழுத்த உணர்வுமானி,காற்றின் திசைவேக உணர்வுமானி,​​ மண் வெப்பநிலை,​​ ஈரப்பத உணர்வுமானி,​​ ​(இதன் மூலமாக 15 செ.மீ ஆழம் வரை மண்ணின் வெப்பநிலை,​​ ஈரப்பதத்தை அளவிட முடியும்),​​ சூரியக் கதிரியக்க உணர்வுமானி ​(சூரியனின் கதிர்வீச்சு வேகத்தை கலோரி அலகில் பதிவு செய்ய),​​ இணை ஈரப்பத உணர்வுமானி ​(தாவர இலையின் ஈரப்பதத்தை பதிவு செய்ய)​ ஆகிய 10 வகையான வானிலைக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.​ ​ ​ இந்தக் கருவிகள் மூலம் வானிலைத் தகவல் சேகரிக்கப்பட்டு,​​ ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் கணக்கிடப்பட்டு செயற்கைகோள் தொடர்பு மூலம் வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.​ தானியங்கி வானிலை நிலையத்தின் மூலம் பதிவு செய்யப்படும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ஹஜ்ய்.ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய்​ என்ற இணை​யத்​தில் தெரிந்து கொள்​ள​லாம் என்றார் ஆட்சியர்.​ ​ நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முனிரத்தினம்,​​ வேளாண்மை இணை இயக்குநர் கே.​ ஜெகதீசன்,​​ துணை இயக்குநர்கள் ந.​ சண்முகம்,​​ தோட்டக் கலைத் துறை ரா.​ கந்தசாமி,​​ வேளாண்மை விற்பனைத் துறை ம.​ முத்துசாமி,​​ உதவி இயக்குநர்கள் தரக் கட்டுப்பாடு பூ.​ மதனகோபால்,​​ பி.​ செல்லமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment