இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பி.டி. கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக அவசர முடிவு எதையும் தமிழக அரசு எடுக்காது-முதல்வர் கருணாநிதி

பி.டி. கத்தரிக்காய் பயிரிடுவது தொடர்பாக அவசர முடிவு எதையும் தமிழக அரசு எடுக்காது என முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்துள்ளார்.

அரசு சாரா அமைப்புகளான பூவுலகின் நண்பர்கள், சேஃப் புட் அலையன்ஸ், தமிழக மகளிர் கூட்டமைப்பு மற்றும் தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று (jan-27) முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, தமிழகத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் பயிரிட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

அப்போது அவர்களிடம் பேசிய முதல்வர், தமிழக அரசு அனுமதி வழங்காமல் பி.டி. கத்தரிக்காய் பயிரிடவும், விற்பனை செய்யக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்:

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment