இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

முறைப்​பா​ச​னம்: பொதுப் பணித் துறை​யி​னர் மீது விவ​சா​யி​கள் புகார்

பெரி​யாறு பிர​தான கால்​வாய் மூலம் முறைப்​பா​ச​னத்தை நடை​மு​றைப்​ப​டுத்​தி​யது தொடர்​பாக விவ​சா​யி​க​ளுக்கு உரிய முறை​யில் தக​வல் தெரி​விக்​க​வில்லை என மதுரை ஆட்​சி​யர் வளா​கத்​தில் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்ற விவ​சா​யி​கள் குறை​தீர் கூட்​டத்​தில் புகார் எழுப்​பப்​பட்​டது.​

​ ​ மதுரை மாவட்​டத்​தில் ஆட்​சி​யர் ந.மதி​வா​ணன் தலை​மை​யி​லும்,​​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் தினேஷ் பொன்​ராஜ் ஆலி​வர் முன்​னி​லை​யி​லும் இந்​தக் குறை​தீர்க் கூட்​டம் நடை​பெற்​றது.​ இதில்,​​ மதுரை கருப்​பா​யூ​ர​ணி​யைச் சேர்ந்த நீரினை பயன்​ப​டுத்​து​வோர் சங்​கத் தலை​வர் புத்​தி​சி​கா​மணி பேசி​யது:​

​ ​ பெரி​யாறு பிர​தான கால்​வாய் மூலம் பாசன வசதி பெரும் இரு​போக பாசன நிலங்​க​ளில் 2-ம் போகத்​துக்​கும்,​​ ஒரு​போக பாசன நிலங்​க​ளுக்​கும் கடந்த 10}ம் தேதி முதல் முறைப்​பா​ச​னம் அமல்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது.​ இது​கு​றித்து விவ​சா​யி​க​ளுக்கு உரிய முறை​யில் பொதுப் பணித் துறை​யி​ன​ரால் தக​வல் அளிக்​கப்​ப​ட​வில்லை.​

​ ​ இத​னால்,​​ கடை​ம​டைப் பகு​தி​யில் உள்ள ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் விவ​சா​யம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.​ இப்​ப​கு​தி​க​ளில் நாற்​றுப் பாவ முடி​யாத சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது.​

மேலும்,​​ மேட்​டுப்​பட்டி உள்​ளிட்ட பகு​தி​க​ளில் மோட்​டார் மூலம் பாசன நீர் திரு​டப்​பட்டு வரு​கி​றது எனத் தெரி​வித்​தார்.​

இதற்கு,​​ சம்​பந்​தப்​பட்ட விவ​சா​யி​களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்​து​மாறு பொதுப் பணித் துறை அதி​கா​ரி​க​ளுக்கு ஆட்​சி​யர் ந.மதி​வா​ணன் உத்​த​ர​விட்​டார்.​

​ ​ அதே​போல் மேலூர் விவ​சா​யி​கள் பேசு​கை​யில்,​​ பெரி​யாறு பிர​தான கால்​வா​யில் நீர் வரத்​துப் பகு​தி​யில் வீடு​க​ளில் இருந்து வெளி​யே​றும் கழி​வு​க​ளும்,​​ நக​ராட்சி மருத்​து​வ​ம​னை​யின் பிர​சவ வார்​டில் இருந்து வெளி​யே​றும் கழி​வு​க​ளும் கலந்து சுகா​தா​ரக்​கேடு ஏற்​ப​டு​கி​றது.​

இது​கு​றித்து பொதுப் பணித் துறை மற்​றும் நக​ராட்சி சார்​பில் சுத்​தம் செய்ய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் எனக் கேட்​டுக் கொண்​ட​னர்.​

​ ​ தமிழ்​நாடு விவ​சா​யச் சங்க மாவட்​டச் செய​லர் கே.தேவ​ராஜ் பேசு​கை​யில்,​​ உரங்​கள் குறித்த பட்​டி​யல் உரக்​க​டை​க​ளில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தா​லும்,​​ உரங்​கள் இருப்​புக் குறித்து எவ்​வி​தத் தக​வல்​க​ளும் தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​

​ ​ உரக் கடை​க​ளில் சோதனை மேற்​கொள்ள வரும் வேளாண் அதி​கா​ரி​கள் குறித்து முன்​கூட்​டியே கடைக்​கா​ரர்​க​ளுக்​குத் தெரி​விக்​கப்​ப​டு​கி​றது.​

குறிப்​பாக கரு​மாத்​தூர் பகு​தி​யில் சில தினங்​க​ளுக்கு முன் நடை​பெற்ற சோத​னை​யில் முன்​கூட்​டியே தக​வல் தெரிந்​த​தால் பல கடை​கள் அடைக்​கப்​பட்​டு​விட்​டன என்​றார்.​

​ ​ அதே​போல்,​​ நெல் கொள்​மு​தல் உள்​ள​து​போல் கொப்​ப​ரைத் தேங்​காய்க்​கான நேரடி கொள்​மு​தல் மையம் ஏற்​ப​டுத்த வேண்​டும் என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​கள் விவ​சா​யி​கள் சார்​பில் தெரி​விக்​கப்​பட்​டது.​

​ ​ இந்தக் கூட்​டத்​தில்,​​ வேளாண்மைத் துறை இணை இயக்​கு​நர் சேவு​கப்​பெ​ரு​மாள்,​​ மின்சாரத் ​துறை,​​ பொதுப் பணித் துறை உள்​ளிட்​ட​அ​தி​கா​ரி​கள் பங்​கேற்​ற​னர்.​

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment