இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

பயிர் காப்பீடு கிடைக்கவில்லை : விவசாயிகள் விரக்தி

சித்தார் கோட்டை பகுதி விவசாயிகளுக்கு கடந்தாண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்காததால் சிரமமடைந்துள்ளனர்.

இதனால் இவர்கள் நடப்பாண்டில் விவசாயப்பணிகளில் ஈடுபடவில்லை. தேவிபட்டினம் அருகே புல்லங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். கடந்தாண்டு பெய்த கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காப்பீடு செய்ததால் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்தனர்.ஆனால், இவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. பல்வேறு வழிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளால், நடப்பாண்டில் பணியினை தொடர முடியாமல் மாற்று பணிக்கு செல்லும் நிலை ஏற்பட் டுள்ளது.
ஊராட்சி தலைவர் முகம்மது அப்துல் கனி கூறியதாவது: மழை அளவு கருவிகளை வைத்து, நிவாரணம் வழங்குவதை தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு,முறையான ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும், என்றார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment