இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

திண்டுக்கல்:விவசாய கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜன., 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை திண்டுக் கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விவசாய கண்காட்சியில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வள்ளலார் அழைப்பு விடுத்துள்ளார்.திண்டுக்கல்லில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: இன்டர்நெட் மூலம் அனைத்து ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளது. இந்த பணி முடிந்ததும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை ஊராட்சியில் இருந்த படியே கலெக் டரிடம் வழங்க முடியும். பதில்களும் இன்டர்நெட்டிலேயே வழங்கப்படும். திண்டுக்கல் டட்லி மேல்நிலைபள்ளியில் ஜன., 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை விவசாய கண்காட்சி நடக்கிறது.


சர்வதேச அளவிலும், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற பெரிய கம்பெனிகள் புதிய தொழில் நுட்பங்கள் குறித்த அரங்குகளை அமைத்து விவசாயிகளுக்கு விளக்க உள்ளனர். தினமும் விவசாயத்துறையினை சார்ந்த விஞ்ஞானிகளின் கருத்தரங்குகள் நடக்க உள்ளது. எனவே விவசாயிகள் பங்கேற்று தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண் டும். இவ்வாறு பேசினார்.ஒட்டன்சத்திரம் சடையன்குளம் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். காந்திகிராம விவசாய அறிவியல் மைய திட்ட உதவியாளர் ஹிகின்தாஜ் இயற்கையாகவே கொண்ட பொருட் களை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.

குறிச்சொற்கள்: ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment