எனவே ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் உயர்த்த வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் தூற்றப்படும் போது அளவுக்கு அதிகமான நெல் கதிர்கள் வீணடிக்கப்படுகின்றன. மேலும் மின்சாரம் இருக்கும் சமயங்களில் மட்டுமே நெல் தூற்றப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனே பணம் வழங்கப்படுவது இல்லை. ஆனால் தனியார் வியாபாரிகள் உடன் பணம் கொடுத்து நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால் தான் அரசு தரப்பில் நெல் கொள்முதல் என்பது குறிப்பிட்ட இலக்கை எட்ட முடியாமல் போகிறது. நெல்லுக்கு கொள்முதல் விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய் வீதம் அரசு வழங்கினால் மட்டுமே விவசாயிகள் நெல் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.