
பொதுவாக சினிமா நடிகர்களை பார்ப்பதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வரும். அதற்காகவே, பொது விஷேசங்களில் அவர்கள் கலந்து கொள்கையில் மக்கள் கூட்டம் அலைமோதும். இது யதார்த்தம். ஆனால் இது தனக்கு மட்டும் தான் இந்த கூட்டம் வருவதாக நினைத்துக்கொண்டு, தமிழகத்தில் அடுத்த முதல்வர் நானே என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறிவருகிறார்.
தே.மு.க 2005 ஆரம்பிக்கப்பட்டு, கடந்த சட்ட சபை தேர்தலில், 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியை பிடித்தது. வரும் சட்ட சபை தேர்தலில் நாங்கள், நான்கு அல்லது பத்து தொகுதியை பிடிப்போம் என பேசினால் அது ஏற்புடையதாகவும்.
z அதை விட்டு விட்டு தமிழகத்தில் அடுத்து நான் தான் முதல்வர் என பேசிவருவது உண்மையில் நல்ல காமடி தான். அவருடைய கல்லூரியிலேயே அவர் முதல்வராக முடியாது. ஏனென்றால் அதற்கும் கல்வித்தகமை வேண்டும். இவ்வாறு பேசினார் நெப்போலியன்.

சென்னை அண்ணாசாலையில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்துகொண்டார். எக்ஸ்பிரஸ் அவென்யூ தலைவர் சரோஜ் கோயங்கா வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
ஒரு வளாகத்தைத் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். கோயங்கா குடும்பம் நீண்ட காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்களை - இன்னும் சொல்லப் போனால், இந்தக் குடும்பத்தின் தலைவர் கோயங்கா அவர்களையே பழகி அறிந்திருந்த அனுபவ ரீதியாக உணர்ந்திருந்த குடும்பம் ஆகும்.
அப்படிப்பட்ட குடும்பத்தின் வழித்தோன்றல்கள், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் உள்ளங் கவருகின்ற அளவிற்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ வர்த்தக வளாகத்தை அமைத்து பெயருக்கேற்றாற்போல் அடிக்கல் நாட்டியதிலிருந்து கட்டிடத்தை முற்றாக முடிக்கின்ற வரையில் எக்ஸ்பிரஸ் வேகத்திலேயே இதை நடத்தி நம் அனைவருடைய வாழ்த்துக்களையும் இன்றைக்குப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை மாநகரத்தின் தேவை நிரம்ப! அந்தத் தேவையை நிறைவு செய்யக் கூடிய வகையில், கோயங்கா குடும்பத்தினரைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவர்கள், வாய்ப்பு கொண்டவர்கள், வசதி மிக்கவர்கள் தான் இதைச் செய்ய முடியும்.
வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும். கோயங்கா அவர்கள் அரசியலிலே ஈடுபாடு கொண்டிருந்த அந்தக் காலந்தொட்டு, நான் அவரை மிக நன்றாக அறிவேன்.
அவரும் என்னை மிக நன்றாக அறிவார். 87 ஆண்டுக் காலம் வாழ்ந்து தமிழகத்திலே, இந்தியத் திருநாட்டிலே அவர் ஆற்றிய பெரும் பணிகள் இன்றைக்கும் நினைவு கூரத் தக்க பணிகளாகும். அத்தகைய பணிகளுக்கெல்லாம் ஒரு சிலாசாசனம் நிறுவியதைப் போலத் தான் இன்றைக்கு இந்த வர்த்தக வளாகம் இங்கே அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
தென்னிந்தியாவில் இருக்கின்ற வளாகங்கள் அனைத்தையும் விட பெரிய வளாகம் இது தான் என்று கூறுகின்ற அளவுக்கு இது இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகள், ஓட்டல்கள் போன்ற பல வசதிகளோடு இது அமைக்கப்பட்டிருக்கின்றது.
என்ன தான் சென்னை மாநகரம் பரப்பளவு மிகுந்தது என்றாலுங்கூட, இன்னமும் நெருக்கடியான சூழ்நிலை இருப்பதை நாம் காணுகிறோம்.
சென்னை மேலும் மேலும் வளர வேண்டும், வளம் பெற வேண்டும் மற்ற இந்தியாவிலே இருக்கின்ற பெரு நகரங்களுக்கு ஈடாக இந்த மாநகரம் விளங்க வேண்டுமென்று நினைத்தாலுங்கூட, அதற்குக் குறுக்கே பல சக்திகள் வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இன்னமும் பக்கத்திலே உள்ள ஆந்திராவில், கர்நாடகாவில் விமான நிலையம்
![[^]](http://cache2.hover.in/hi_link.gif)
டெல்லியிலே இருக்கின்ற விமான நிலையத்திற்கு ஈடாக இந்தியாவிலே உள்ள மாநிலங்களில் - அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், அதற்கு அடுத்தபடியாகவாவது விமான நிலையங்கள் இருக்க வேண்டுமென்று கருதுகின்றோம்.
ஆனால் புது விமான நிலையத்திற்கு நாம் அடிக்கல் நாட்டிய மறுநாளே, ஆயிரம் பேர் அல்லது நூறு பேர் இந்த இடத்தை ஆக்ரமிக்காதே! என்று கோஷம் போட்டுக் கொண்டு, கொடி பிடித்துக் கொண்டு வருவதையும், அவர்களுக்கு சில பேர் தலைமை வகித்து வருவதையும் காணுகிறோம். நான் அவர்களையெல்லாம் வாழ விடக் கூடாது என்று எண்ணுகிறவன் அல்ல.
தமிழ்நாட்டில் பல ஆண்டுக் காலமாக இருந்த குடிசை வாழ் மக்களை கோபுரத்திலே ஏற்றி உட்கார வைக்கவேண்டுமென்று முதன் முதலாக சென்னை மாநகரத்தில் நினைத்தவனே நான் தான் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அதனுடைய விளைவாகத் தான் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு - நடைபாதையோரங்களில் வாழ்ந்து வந்த குடிசை வாழ் மக்களுக்கெல்லாம் கோபுரம் போன்ற வீடுகள் கட்டித் தரப்பட்டிருக்கின்றன.
அதைப் போல மாற்றுத் திட்டங்கள் அவர்களுக்கு அமைக்கப்படுமென்று உறுதியளித்து, விமான நிலையத்திற்கு கொஞ்சம் விரிவான இடம் தேவை, கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டு மக்களிடத்திலே கையேந்தி, தயவுசெய்து விட்டுக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற வேண்டிய நிலைமையிலே தான் அரசு இருக்கிறது.
அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்திலே கூட ஏறத்தாழ 18 இலட்சம் சதுர அடி பரப்பில் ஒரு வர்த்தக மையத்தைக் கட்ட முடிகிறது என்றால், அது கோயங்கா குடும்பத்தால் மாத்திரம் தான் முடியும் என்பதை இந்தக் கட்டடம் நமக்கு விவரித்துக் கொண்டிருக்கிறது.
எப்படிப்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகளை - எப்படிப்பட்ட அருமையான திட்டங்களை இவர்களால் நிறைவேற்ற முடியும், வசதி வாய்ப்புகளை மக்களுக்குத் தர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தத் தொடக்க விழா அமைந்திருக்கின்றது. இந்த ஆரம்ப விழாவே அதற்கான அச்சாரமாக விளங்குகிறது.
இப்பொழுதே இந்த மாளிகை எழும்ப - இந்த வளாகம் எழும்ப மாநகராட்சி மன்றம், அரசு, அதிகாரிகள் அத்தனை பேரும் தந்த ஒத்துழைப்பை இங்கே நன்றியோடு பாராட்டினார்கள்.
நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வேன். தொடர்ந்து உங்களுக்காக அல்ல -சென்னைக்கு வருகின்ற மக்களின் வசதி வாய்ப்புக்காக- அவர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக - அவர்களுடைய உற்சாகத்திற்காக - சுற்றுப் பயணத்தில் ஈடுபடுகின்ற பக்கத்து நாட்டுக்காரர்களுக்காக என்றும் பல வசதிகளைச் செய்து கொடுக்க எவ்வளவு தேவையோ அந்தத் தேவைகளை நிறைவு செய்து கொடுப்போம் - அரசின் சார்பாக - மாநகராட்சி மன்றத்தின் சார்பாக செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
கோயங்கா குடும்பத்தாரைப் போன்ற குடும்பத்தினர் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளிலே ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொண்டு - இந்த விழாவிலே கலந்து கொண்டு, இந்த வளாகத்தை அமைத்தவர்களை வாழ்த்துவதில் நான் பெருமையடைகிறேன். ஏனென்றால் கோயங்கா, தமிழகத்திலே பிறந்தவரல்ல, பீகாரிலே பிறந்தவர் என்றாலுங்கூட - தமிழ்நாட்டு அரசியலிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு -அப்படி ஈடுபடுத்திக் கொண்ட காரணத்தால் பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஈ.வெ.ரா., பேரறிஞர் அண்ணா போன்றவர்களோடெல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அப்படிப்பட்டவரோடு நானும் கொஞ்ச காலம் தொடர்பு கொண்டிருந்தேன் என்பதையும், அவர் நடத்திய பத்திரிகை நேர்மையான முறையில் - எங்களைத் தாக்கக் கூடிய முறையிலே எழுதினாலும் - எங்களைக் கண்டிக்கக் கூடிய வகையிலே எழுதினாலும் - அதிலே ஒரு கண்ணியம் இருக்கும், அதிலே ஒரு நாகரிகம் இருக்கும்.
எப்படிப்பட்ட நாகரிக எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களான ஏ.என். சிவராமன் போன்றவர்கள், சொக்கலிங்கம் போன்றவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு நடைபெற்ற தினமணி பத்திரிகையானாலும்,
எக்ஸ்பிரஸ் பத்திரிகையானாலும் - இந்தப் பத்திரிகைள் நடந்து கொண்ட நாகரிகமான முறையிலே தொடர்ந்து தமிழகத்திலே உள்ள பத்திரிகைகள் எல்லாம் நடைபெறுமேயானால், அது கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதை.
இந்தக் கட்டிடம் மாத்திரம் கோயங்கா அவர்களுக்குத் தரப்பட்ட காணிக்கை அல்ல, அந்தப் பத்திரிகைகளிலே நாம் கடைப்பிடிக்கின்ற நாகரிகமும், கண்ணியமும் கோயங்கா அவர்களுக்கு நாம் காட்டுகின்ற நன்றி யாகும் என்பதை எடுத்துச் சொல்லி, இந்த விழாவிலே கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமைக்காக மீண்டும் மீண்டும் நன்றி கூறி, குறிப்பாக என்னை அழைத்து இந்த விழாவிலே கலந்து கொள்ளச் செய்த கோயங்கா குடும்பத்தாருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார் கருணாநிதி.

கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலை டிரைவர்கள் குமாரசாமி, பெஞ்சமின் ஓட்டி வந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு இரவு 1மணியளவில் வந்தது. சாத்தூரில் இருந்து புறப்பட்டு 1.06 மணிக்கு சாத்தூரில் இருந்து வெங்கடாஜலபுரம் எனும் இடத்தில் வந்த போது, ரயில் தண்டவாள இணைப்பு இரண்டு அடிக்கு நீளத்திற்கு உடைந்தது. இதனால் ரயில் இன்ஞ்சின் முன்பக்க சக்கரம் தண்டவாளத்தை விட்டு விலகி, சுமார் 800மீட்டர் தொலைவுக்கு வெளியே சென்றது. டிரைவர்களின் சாமர்த்தியத்தால் ரயில் பெட்டிகளும் எதுவும் கவிழவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரயிலில் சுமார் 1500 பயணிகள் பயணித்தனர். அவர்களில் யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மதுரை ரயில்வே ஊழியர்கள் மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தினால் சென்னையில் இருந்து தென்பகுதிக்கு வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தென் மாவட்டத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகரில் நிறுத்தி வைக்கப்பட்டன. கொல்லம் டூ மதுரை செல்லும் பாசஞ்சர் ரயில் சாத்தூரில் நிறுத்தப்பட்டன.
கொல்லம் டூ மதுரை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் , மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் பயணிகள் ஆங்காங்கே தவித்தனர். சென்னையில் இருந்து விருதுநகர் வழியாக இன்று காலையில் செல்லும் தூத்துக்குடி மங்களூர், செங்கோட்டை எக்ஸ்பிரஸ், தென்காசி பாசஞ்சர் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. காலை 9 .45 க்கு மேல் ஒவ்வொரு ரயில்களாக அனுப்பி வைக்கப்பட்டன.
சாத்தூர் அருகே ரயில் விபத்து நடந்ததும் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். அருகில் பஸ் வரும் சாலைக்கு அனைவரும் நடந்து சென்று தங்களுடைய பயணத்தை துவக்கினர். பயணிகள் மீட்டு உரிய பயணத்திற்கு செல்ல பஸ் போக்குவரத்தை ரயில்வே அதிகாரிகள் செய்யவில்லை என பயணிகள் குமுறினர். இது குறித்து விருதுநகர் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து எதுவும் உத்தரவு வரவில்லை என்றனர்.
இந்த ரயில் தண்டவாளம் உடைந்தும் ரயில் பெட்டிகள் கவிழாமல் இருந்தததால் பயணிகள் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பெரும் விபத்து எவ்வாறு தவிர்க்கப்பட்டது பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி என்ற விவரத்தை அங்குள்ள நமது தினமலர் நிருபர் தரும் தகவல் வருமாறு :
சாத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்திருகிறது. முதலில் தண்டவாளம் உடைந்து கிடந்ததால் ரயில் இன்ஞ்சின் இந்த இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு இழுத்து சென்றுள்ளது. இதில் இன்ஞ்ஜின் 4 வீல் , சிலிப்பர் கட்டை மற்றும் கற்கள் மீது ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரயில் பெட்டிகள் எதுவும் தண்டவாளத்தை விட்டு அகலவில்லை என்பது தான் பெரும் உயிர்ச்சேதம் இல்லாமல் விபத்து முடிந்தது.
மேலும் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில்தான் ரயில் வந்திருக்க வாய்ப்பு என்பதால் இன்ஞ்ஜின் 800 மீட்டர் தொலைவுக்குள் ரயில் நின்று விட்டது. வேகம் அதிகரித்து வந்திருந்தால் ரயில் கட்டுப்பாடு இழந்து பெட்டிகள் கவிழ வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் . என்கிறார் நமது நிருபர்.
சாத்தூர் அருகே உள்ள இந்த ரயில் பாதை நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் இது போன்று ரயில் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பாதையில் நாள் ஒன்றுக்கு 30 ரயில் வந்து செல்கிறது. குறிப்பாக சரக்கு ரயில்களே அதிகம். இநத தண்டவாளம் 80 ஆண்டுகள் பழமையானவை. எனவே பலம் இழந்து காணப்படுகிறது.இது குறித்து வர்த்தக சங்கத்தினர் ரயில்வே துறைக்கு ரயில்பாதை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது . இது செவிடன் காதில் ஊதிய சங்காக போனது என்கின்றனர் இந்த சங்க பிரமுகர்கள்.
இந்த சம்பவத்தில் சதி வேலை என்ற கேள்விக்கு உரிய முகாந்திரம் இல்லை. ரயில் தண்டவாளம் உடைந்த இடத்தில் வெடிபொருட்களோ, திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. எனவே சதித்திட்டம் இல்லை என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.