இந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....

உளுந்து சாகுபடிக்கு தேவை 3 நாள்​ காவிரி நீர்​: விவசாயிகள் எதிர்பார்ப்பு

3 நாள்கள் காவிரி நீர் கிடைத்தால் போதும்,​​ 40 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்ய முடியும் என்று,​​ கடலூர் மாவட்ட டெல்டா ​ விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.​ ​கடலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.ஆனால்,​​ கடந்த 3 ஆண்டுகளாக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையாலும்,​​ ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் உளுந்து சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு,​​ விவசாயிகளிடம் விதை உளுந்துகூட இல்லாமல் போயிற்று.இந்த ஆண்டு கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு கால தாமதமாகவே தண்ணீர் விடப்பட்டதாலும்,​​ விதை உளுந்து உரிய நேரத்தில் கிடைக்காததாலும்,​​ அண்மையில் அரசு தருவித்து இருக்கும் விதை உளுந்து விலை அதிகமாக இருப்பதாலும்,​​ உளுந்து சாகுபடி எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.இதனால் டெல்டா பாசனப் பகுதிகளில் 1 லட்சம் ஏக்கரில் நடைபெற்று இருக்க வேண்டிய உளுந்து சாகுபடி,​​ சுமார் 50 ஆயிரம் ஏக்கருடன் நின்று போய்விட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.​ ​ ​இந்த நிலையில் மேட்டூர் அணை ஜனவரி 28-ம் தேதியுடன் மூடப்பட்டு விட்டது.கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிப் பாசன வாய்க்கால்களும்,​​ இதர காவிரிப் பாசன வாய்க்கால்களும் மூடப்பட்டுவிட்டன.ஆனால்,​​ சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதற்காக,​​ வீராணம் ஏரியின் முழுக் கொள்ளளவான 47.5 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது.​ வீராணத்துக்கு காவிரி நீரை விநியோகிக்கும் கொள்ளிடம் கீழணையிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது.​ ​இந்த நிலையில் கடலூர் காவிரி பாசனப் பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒரு முறை என,​​ 3 தினங்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட்டால் போதும்,​​ சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் உளுந்து சாகுபடியை முடித்துவிடலாம் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.வீராணம் ஏரியை மராமத்து செய்ய இருப்பதால்,​​ தண்ணீர் முழுவதையம் விரைவில் வெளியேற்ற இருப்பதால்,​​ இதில் சிரமம் இருக்காது என்றும் விவசாயிகள் கருதுகிறார்கள்.​ ​இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறியது:​ ​​ இந்த ஆண்டு காவிரி நீர் தாமதமாகக் கிடைத்தது.​ விவசாயிகளிடம் விதை உளுந்து இல்லை.​ வேளாண்துறை தாமதமாக தருவித்து இருக்கும் விதை உளுந்து,​​ விலை அதிகமாக இருக்கிறது.​ ​பனி தொடர்ந்து நீடித்து வருகிறது.​ இந்த நிலையில் காவிரி நீர் 15 நாள்களுக்கு ஒருமுறை என 3 தினங்கள் மட்டும் கொடுத்தால்,​​ உளுந்து சாகுபடியை முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.மராமத்துப் பணிகளுக்காக வீராணம் ஏரி நீரை திறந்து விட இருக்கிறார்கள்.​ அதை உளுந்து பாசனத்துக்கு ஏன் அளிக்கக் கூடாது?​ பயறு வகைகள் சாகுபடி இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்து விட்டதாகக் கவலைப்படும் தமிழக அரசு,​​ மேட்டூர் அணையிலும்,​​ கல்லணையிலும் கொள்ளிடம் கீழணையிலும்,​​ வீராணம் ஏரியிலும் தேக்கி வைத்து இருக்கும் காவிரி நீரில் கொஞ்சம் இந்த ஏழை விவசாயிகளுக்கு ஏன் வழங்கக் கூடாது?வீராணம் ஏரியில் இருந்து மொத்தம் 2 அடி நீரை மட்டும் விவசாயிகளுக்குக் கொடுத்தால் போதும்.​ 40 ஆயிரம் ஏக்கரில் இருந்து குறைந்தபட்சம் 60 ஆயிரம் டன் உளுந்தை விளைவிக்க முடியும்.விவசாயிகளிடம் இருந்து தற்போது உளுந்து கிலோ ரூ.40-க்குக் கொள்முதல் செய்யப் படுகிறது.​ சந்தையில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார் ரவீந்திரன்.

குறிச்சொற்கள்: , , ,

பகிர்தல் மிக எளிமையானது,அழகானது

இதனைச் சார்ந்த பதிவுகள்

0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..

Post a Comment