கோவை மாவட்டம் அன்னூரில் இன்று (டிசம்பர் 28 )காலையில் பத்திரைக்கையாளர்களைச் சந்தித்த போது துணை முதல்வர் ஸ்டாலின் அன்னூர் - அத்திக்கடவு நிலத்தடி நீர் செரிவூட்டு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு இது ஒரு மகிழ்வான செய்தி.
பண்ணையின் சிறப்பாக பாம்பு, தேள் போன்ற விஷங்களை முறியடிக்கும் மூலிகை பண்ணையும் இருந்தது. தற்போது இவைகள் பராமரிப்பின்றி அழிந்துவிட்டது. மா, கொய்யா, தென்னை போன்ற உற்பத்தியும் மிகவும் குறைந்துவிட்டது. எப்போதும் பரபரப்பாக இயங்கிய பண்ணை தற்போது மந்தமாகி விட்டது. இதனால் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது.எனவே, அண்ணாதுரை ஆராய்ச்சி பண்ணையை மீண்டும் புதுப்பொழிவுடன் பழவகை, கீரை வகை, மருத்துவ இயற்கை மூலிகை செடி, பசுமையாக்கும் முறையில் மரங்களை வளர்க்க மரகன்றுகள் நட்டு பண்ணையை மேம்படுத்தி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
மேலும், காட்டுப்பன்றிகள், மான்களும் வேளாண்மை பயிர்களை அழித்து வருகின்றன. பகலில் வனப்பகுதியில் இருக்கும் இந்த விலங்குகள் இரவில் கூட்டம் கூட்டமாக விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகின்றன. ஒவ்வொரு விவசாயியும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் அடைந் துள்ளனர்.
யானையை விரட்ட, பல்வேறு யுக்திகளை விவசாயிகள் கையாண்டனர். பட்டாசு வெடித்தனர். நாளாக, நாளாக பழகிப்போன யானைகள், மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்தன. காவல் இருந்த விவசாயிகளையும் விரட்டியடித்தது. வனவிலங்குகள் விளை நிலங்களுக்கு வராமல் தடுக்க, வனத்துறையினரும் மின்வேலியை அமைத்தனர். தேடல் விளக்கு (சர்ச் லைட்) அடித்து, விரட்டி வந்தனர்.
யானைகளோ மின் வேலியையும் மிதித்து சேதம் செய்து விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிட்டு அழித்து வருகிறது. விவசாயிகள் வனப்பகுதி ஓரத்தில்"அகழி' அமைத்தனர். யானைகள் அவற்றை இடித்து சமதளமாக்கி விளை நிலங்களுக்கு வந்து செல்கின்றன. வனவிலங்குகள் வருவதை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்புகளை வனத் துறை நிர்வாகமும், விவசாயிகளும் அமைத்தனர். அனைத்து யுக்திகளையும் யானைகள் முறியடித்தன. தைரியமாக விளை நிலங்களில் கால் பதித்தன.
இவற்றை விரட்ட சிறுமுகை பகுதி விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். வெற்றியும் கிடைத்துள்ளது.
சிறுமுகை கூத்தாமண்டிபிரிவு, மூலையூர் பகுதி விவசாயிகள் விளை நிலங்களை சுற்றி "கலர் லைட்' போட்டனர். இரவு முழுவதும் கலர் லைட் "அணைந்து அணைந்து' எரிவதால், யானைகள் விளை நிலங்களுக்கு வராமல் வந்த வழியில் திரும்பி செல்கின்றன.
விவசாயி லெனின் கூறியதாவது: விவசாய பயிர்களை யானைகள், காட்டுப்பன்றிகள் அழித்து சேதம் செய்து வருகின்றன. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டிற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு கி.மீ., தூரத்திற்கு பேட்டரியில் எரியும் சிறிய "கலர் லைட்' மாதிரிக்கு போட்டோம். 750 ரூபாய் செலவானது. இரவில் வனப்பகுதியில் இருந்து வேகமாக வரும் யானைகள், காட்டுப்பன்றிகள் அணைந்து அணைந்து எரியும் கலர் லைட்டை பார்த்து திரும்பி சென்று விடுகின்றன. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மற்ற விவசாயிகளும் விளை நிலங்களை சுற்றியும் வண்ண விளக்கு போடுகின்றனர். ஒரு பேட்டரியை "சார்ஜ்' செய்தால் இரண்டு நாட்களுக்கு பயன்படுத்தலாம். வனவிலங்குகளிடம் இருந்து பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு விவசாயி லெனின் கூறினார்.
விவசாயிகளின் புதிய யுக்தி எவ் வளவு நாள் கைகொடுக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.
ராஜபாளையம் பகுதியில் விவசாயிகளுக்கான விதை நெல் தேவையில் 20 சதவீதம் மட்டுமே விவசாயத்துறையால் பூர்த்தி செய்யப்படுகிறது. பெரும் பாலான விவசாயிகள், தனியார் விதை விற்பனை நிறுவனங்களையே சார்ந்துள்ளனர். இந்நிலையை மாற்ற, "விதை கிராமத் திட்டத்தின்' கீழ் விதை நெல் உற்பத்தியில் விவசாயிகளை ஈடுபடுத்த விவசாயத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, விதை உற்பத்திக்கான ஆதார விதை மற்றும் சான்று விதைகளை 50 சதவீத மானிய விலையில், இத்திட்டத்தில் பங்கேற் கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அவர்கள் அந்த ஆதார விதைகளைக் கொண்டு தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்வர். உற்பத்தி செய்த விதைகளை தங்கள் கிராமத்திலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள விவசாயிகளுக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம், விதை நெல் பற்றாக்குறை, வரும் காலங்களில் பெருமளவில் குறைந்து விடும் என விவசாயத்துறை கருதுகிறது.நடப்பாண்டில், ராஜபாளையம் பகுதியில் முகவூர் மற்றும் சுந்தரராஜபுரம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், இத்திட்டத்திற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தரமான, வீரியமிக்க விதைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறை குறித்து, இவ்விவசாயிகளுக்கு மாவட்ட விவசாய துணை இயக்குனர் பாண்டியராஜ், ராஜாபளையம் உதவி விவசாய இயக்குனர் தனசேகரன் பயிற்சி அளித்தனர்.
கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், ஒலப்பாளையம், ஒரம்புபாளையம், திருகாடுதுறை, நடையனூர், சேமங்கி, நொய்யல், புன்னம்சத்திரம், தளவாபாளையம், ஆவரங்காட்டு புதூர், ஆத்தூர் செல்லும் சுற்றுப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கிழங்கு ரகமான முன்வாடி, வெள்ளைக்கிழங்கு ஆகியவற்றில் மாவு சத்து அதிகம் உள்ளதால், நாமக்கல், சேலம் மா வட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், செல்லப்பன்பட்டி, புதன்சந்தை ஜவ்வரிசி மில்லுக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த மாதம் நொய்யல் ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து திறக்கப்பட்ட சாயக்கழிவு நீர் இடைவிடாமல் காவிரி ஆற்றில் நுரைத்துக்கொண்டு கலந்தது. காவிரியும், நொய்யல் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் இருந்து ஆற்றில் மூன்று கி.மீ., தொலைவில் சிறுவிவசாயிகளின் நதி நீரேற்று பாசன நீர் ஊர்ந்தும் மையம், வேட்டமங்கலம், புங்கோடை, காளிபாளையம் பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இங்கு அடிக்கடி சாயக்கழிவு நீர் செல்வதையடுத்து அங்கிருந்து கழிவு நீர் கலக்காத தண்ணீர் பாசனம் செய்வதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட வேட்டமங்கலம், புங்கோடை திட்ட அலுவலகத்தில் உள்ள மோட்டாரானது, கொடுமுடி ஸ்டேட் பேங்க் கிளை மற்றும் திருகாடுதுறை ஐ.ஓ.பி., கிளை மூலம் பெறப்பட்ட கடன் உதவியில் அமைக்கப்பட்டவை. இவை தொடர்ந்து சாயக்கழிவு மற்றும் அதிக உப்பு சதவீதம் உள்ள தண்ணீரை பாய்ச்சுவதால் அடிக்கடி மோட்டார் பழுது ஏற்பட்டு, துருப்பிடிக்கிறது.
வங்கி கடன் செலுத்தவே தடுமாறும் நிலையில், மோட்டார் பழுது நீக்கவும் செலவிட முடியாமல் விவசாயிகள் பொருளாதார ரீதியாக தவிக்கின்றனர். நொய்யல் ஆற்று சாயக்கழிவு கலந்த தண்ணீர் பாசனம் காரணமாக நொய்யல் நந்தமேடு, புங்கோடை, வேட்டமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மானாவாரி பயிரான மரவள்ளிக்கிழங்கு தற்போது நல்ல விலைக்கு விற்கவேண்டிய நிலையில், சரியான தண்ணீர் கிடைக்காமல் கருகி சருகாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு அதிக பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். உற்பத்தி இருமடங்கு அதிகரித்ததால் கிழங்கு விலைவீழ்ச்சியை சந்தித்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மாநிலம் முழுவதும் உற்பத்தி குறைவால், மரவள்ளிக்கிழங்கின் விலை நல்ல லாபம் தரும் வகையில் உள்ளது. மரவள்ளியில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, மைதா மாவு, அழகு சாதனப் பொருள் மற்றும் பலவகை உணவு பொருள் தயாரிப்பும் அதிரித்து வரும் நிலையில் மரவள்ளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், சாயக்கழிவு நீரால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வேலாயுதம்பாளையம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு கருகி சருகாவதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பாசன நீரில் சாயக்கழிவு சேர்வதை தடுக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
வேளாண் பயிர் சாகுபடியில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம். மண்ணில் சத்து குறிப்பிட்ட அளவு மட்டும் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு விவசாயிகள் தழை, மண், சாம்பல் சத்துக்களை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதனால் தாவரங்களுக்கு தேவையான நுண்ணூட்டச்சத்து போதுமான அளவு கிடைப்பதில்லை. இதன் விளைவு பயிர்களில் ஊட்டச்சத்து குறைபாடு தோன்றுகிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் அறித்து அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் அனிதா, வள்ளியம்மை, ஆனந்தப்பிரியா ஆகியோர் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சில நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு குஞ்சுகளை வழங்கி கோழியாக வளர்த்து மீண்டும் அதே நிறுவனங்களுக்கு தரும் வகையில் ஒப்பந்தம் செய்கின்றனர். இதற்காக வளர்ப்புக்கூலி கிலோ ஒன்றிற்கு ஒன்றரை முதல் மூன்று ரூபாய் வரை தன்னிச்சையாக நிர்ணயம் செய்து வழங்குகின்றன. இந்த கூலி மிகவும் குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சுமார் 3 முதல் 5 லட்ச ரூபாய் வரை கடன் பெற்று 10 லட்ச ரூபாய் வரை செலவிட்டு பண்ணை அமைத்து தொழில் செய்வதால் இத்தொழிலை விட்டு செல்லவும் முடியாத நிலை உள்ளது. மின் கட்டண, வரி சலுகைகள், கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தல் உள்ளிட்ட விஷயங்களை பேசி தீர்க்க கோழி வளர்ப்பு தனியார் நிறுவன உரிமையாளர்கள், கறிக்கோழி வளர்ப்போர், கால்நடைத்துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென வேடசந்தூர் தாலுகா கறிகோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
தற்போது நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால் தமிழகத்தில் தாமதமாக துவங்கிய பருவமழையாலும், வார்டு புயல் காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.இதனால் விளைந்திருந்த நெற்கதிர் கனமழையில் சாய்ந்துள்ளன. வயல்களில் தண்ணீர் வடியாமல் தொடர்ந்து தேங்கி வருவதால் கதிர்கள் சாய்ந்து மழைநீரில் நனைந்து பாழாகி வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியில் கிணறுகள் வறண்டு போனதால் வாடும் நிலையிலுள்ள வெங்காய செடிகளை காப்பாற்ற விவசாயிகள் டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் சில மாதங்களாக பருவமழை பெய்து வருகிறது. ஆனால் இம்மழை விருதுநகர் மாவட்டத்தில் குறைவான அளவே பெய்தது. இதனால், கண்மாய்களில் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகளும் வறண்டன. மக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்நத்தம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் மழையை நம்பி 500க்கும் அதிகமான ஏக்கர்களில் விவசாயிகள் வெங்காயம் நடவு செய்தனர்.
ஆனால் மழை தொடர்ந்து பெய்யாமல் போனதாலும், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தண்ணீர் இல்லாமல் வெங்காயசெடிகள் பட்டு போகும் நிலை ஏற்பட்டது. பொதுவாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச அருகிலுள்ள வயல்களின் கிணறுகளிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சுவர். ஆனால் தற்போது பிள்ளையார் நத்தம் பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர் குறைந்ததால் வெங்காய செடிகளை காய்ந்து போவதை தடுக்க விவசாயிகள் தற்போது தண்ணீரை டேங்கர்களில் விலைக்கு வாங்கி வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
மனோகரன் தெரிவித்ததாவது: ஒரு ஏக்கரில் வெங்காயம் நடவு செய்துள்ளேன். தற்போது ஒன்றரை மாதசெடியாக உள்ள வெங்காயத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. நடவு செய்யும் போது மழை பெய்தது. மேலும் கிணற்றிலும் தண்ணீரும் இருந்தது. இதை நம்பி வெங்காயம் நடவு செய்தேன். தற்போது மழையுமில்லை. கிணற்றில் தண்ணீரும் இல்லை. செடிகள் காயும் நிலைக்கு வந்து விட்டது. வெங்காய செடியை காப்பாற்ற டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கி விட்டு வருகிறேன். வெங்காயத்திற்கு 10 நாளுக்கொருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு ஏக்கர் முழுவதும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச 6 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள 32 டேங்கர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு டேங்கருக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுக்க வேண்டியதுள்ளது. இதுவரை இல்லாத அளவு விவசாயத்திற்கு கடுமையான செலவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
விவசாயி வேலுச்சாமி தெரிவித்ததாவது: மழையை நம்பி ஐப்பசி மாதம் வெங்காயம் நடவு செய்தேன். தற்போது விளைச்சல் வரும் நேரத்தில் மழையும் இல்லை, கிணற்றில் தண்ணீரும் இல்லை. இதனால் வெங்காய செடிகள் காயும் நிலைக்கு வந்துவிட்டது. இதை காப்பாற்ற டேங்கர் மூலம் தண்ணீர் வாங்கி வயலில் விட்டு வெங்காயத்தை காப்பாற்றி வருகிறேன். இதனால் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகி வருகிறேன். பொதுவாக ஏக்கருக்கு 60 முதல் 70 மூடை வெங்காயம் கிடைக்கும். தற்போது தண்ணீர் இல்லாததால் இந்த விளைச்சல் கிடைப்பது என்பது சந்தேகமாகத்தான் உள்ளது. என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 18,600 எக்டர் நிலப் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சீதோஷணத்தால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக காற்றின் ஈரப்பதம் 91 முதல் 99 சதவீதம் இருந்து வந்தாலும், இலைகளில் தொடர்ந்து ஈரப்பதம் காணப்படுவதாலும், அதிகளவு தழைச்சத்து உரம் இடுவதாலும் புகையான் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட விதைப்பதற்கு முன்பாக விதைகளை சூடோமோனாஸ் புளூரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது இத்தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் புகையான் தாக்குதல் தென்பட்டால், மான்கோசெப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் அல்லது டிரைசைக்லோசோல் 75 சதவீதம் நனையும் துகள் மருந்தினை லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவிலும் நீரில் கலந்து கைத்தெளிப் பான் மூலம் தெளிப்பதால் புகையான் தாக்குதலினை கட்டுப்படுத்தலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
தியாகதுருகம்:ரிஷிவந்தியத்தில் குரங்குகளின் எண் ணிக்கை அதிகமாகி உணவுக்காக கரும்பு பயிர்களை சேதப்படுத் துவது அதிகரித்துள்ளது. இதனால் வயலை சுற்றி மாட்டு எலும்புகளை தோரணமாக கட்டி குரங்குகளை விரட்ட புது யுக்தியை விவசாயிகள் கையாண்டு வரு கின்றனர்.ரிஷிவந்தியத்தில் குரங் குகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக் கில் குரங்குகள் உள்ளதால் உணவுக்கு வீடுகளில் புகுந்து சூரையாடுவது வாடிக்கையாக நடக்கிறது. இவைகளுக்கு ஊரில் உணவு கிடைக்காத போது ஒதுக்குபுறமாக உள்ள வயல்வெளிகளுக்கு சென்று சாகுபடி செய் துள்ள உளுந்து, கரும்பு பயிர்களை சேதப்படுத்து கின்றன. முக்கியமாக கரும்பு பயிரின் நுனி குருத்தை கடித்து சேதப் படுத்துவதால் வளர்ச்சி தடைபட்டு மகசூல் பாதிக் கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கரும்பு வயலுக் குள் குரங்கு புகுந்து சேதப் படுத்தாமல் இருக்க பட் டாசுகளுடன் பகல் முழுவதும் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.
குரங்கை அடித்து விரட் டாமல் அவைகளாகவே விளைநிலங்களுக்கு வரமால் ஒதுங்கி செல்ல விவசாயிகள் புது யுக்தியை கையாண்டு வருகின்றனர். மாட்டிறைச்சி கடைகளுக்கு சென்று வெட்டும் மாடுகளின் எலும்புகளை விலைக்கு வாங்கி அவற்றை தோரணமாக கரும்பு வயலை சுற்றி கட்டி விடுகின்றனர்.அதை பார்க்கும் குரங் குகள் கரும்பு வயலுக்கு செல்ல பயந்து ஒதுங்கி ஓடி விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின் றனர். சாகுபடி செய்த பயிரை குரங்குகளிடமிருந்து பாதுகாக்க "மாட்டு எலும்பு தோரணம்' விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகிறது.
வனப்பகுதியில் குரங் குகளுக்கு உணவு கிடைக் கும் வகையில் பழ மரங் களை நட்டு பாதுகாத்தல், ஊருக்குள் புகுந்து வீட்டில் உள்ள உணவு, சாகுபடி செய்த விளைபொருட்களை சேதப்படுத்துவது தவிர்க்கப்படும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.சமூக காடுகள் திட்டம் என்ற பெயரில் காட்டில் இயற்கை மரங்களை அழித்து விட்டு வருவாய் ஈட்டித்தரும் யூக்கலிப்டஸ் மரங்களை வளர்த்து வரும் வனத்துறையினர், அங்கு வாழ்ந்த விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய பழ மரங் களை நட்டு பராமரிக்க முன் வர வேண்டும்.
சின்னசேலம்:சின்னசேலம் பகுதிகளில் கோலியாஸ் மருத்துவ குணம் கொண்ட கிழங்கு பயிர் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.சின்னசேலம் அடுத்த நரிக்குறவர் காலனி, நைனார்பாளையம், செம் பாக் குறிச்சி மற்றும் சுற்று பகுதிகளில் கோலியாஸ் மருத்துவ குணம் கொண்ட கிழங்கு பயிரை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.
இந்த கிழங்கின் வளர்ச்சி பருவம் 180 நாட்களாகும். இதற்கு அதிகமான நீர் தேவையில்லை. இப்போதுள்ள பருவ நிலையில் இப்பயிர் செழித்து வளர்கிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கோலியாஸ் உற்பத்தியாகும். பருவ நிலை நன் றாக இருப்பதால் அதிகளவில் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.இம்மருத்துவ குணம் கொண்ட கிழங்கு ஒரு டன் 10 ஆயிரம் ரூபாயும், தண்டு பகுதிக்கு ஒரு டன் 2000 ரூபாய் அளவிலும் விற்கிறது. ஒரு ஏக்கருக்கு அரை டன் அளவு அதிகம் விளைச்சல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இம்மருத்துவ குணம் கொண்ட கிழங்குகள் பெங்களூருவிலிருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த கிழங்கு மனித உடலில் இதயம், கணையம், கிட்னி போன்ற பகுதிகளுக்கு தேவைப்படும் மருந்தாக பயன்படுகிறது. இக்கிழங்கை சேலம் மாவட் டத்தில் உள்ள தனியார் நிறுவனம் கொள்முதல் செய்து பெங்களூருவிற்கு அனுப்புகிறது.
காட்பாடி : விஐடி பல்கலையில் நிலையான ஊரக வளர்ச்சி, ஆராய்ச்சி கல்வி மையம் மற்றும் வேலூர் வனவியல் விரிவாக்கம் மையம், வேலூர் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கம் ஆகியவை இணைந்து "கால்நடை வளர்ப்பு' முறைகள் பற்றி விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பள்ளிகொண்டா வனவியல் விரிவாக்கம் பயிற்சி மையத்தில் நடத்தியது.கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் தியோபிலஸ் ஆனந்தகுமார், பண்ணைகள் பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள், கால்நடை தீவனங்கள் தயாரிக்கும் முறைகள், சினை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் தடுப்பூசிகள் ஆகியன பற்றி பட விளக்கத்துடன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
நபார்டு வங்கி மாவட்ட துணை பொது மேலாளர் சுரேஷ் , இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மைய இயக்குநர் ஜெகன்நாதன், வனவியல் விரிவாக்கம் அலுவலர் பொன்னுரங்கம் ஆகியோர், வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்கள் பற்றி விளக்கம் அளித்தார். உலக வெப்பமயமாதல் பற்றியும், காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.இதில் பள்ளிகொண்டா, பசுமாத்தூர், வெட்டுவானம், கொல்லமங்கலம், அக்ராவரம், பள்ளிகுப்பம், வேப்பூர், ஒடுக்கத்தூர், ஓலவாசி விவசாயிகள் மற்றும் மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர்.மாவட்ட மரம் வளர் போர் சங்க தலைவர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
விவசாயிகளுக்குத் தேவையான உளுந்து, பச்சைப்பயறு தானிய விதைகளை வேளாண் துறை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தது. இந்நிலையில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் நெற்பயிர் பால்பிடிக்கும் பருவத்தில் தண்டு முறிந்து விழுந்து விட்டது.பூ பூத்து நெல்மணியாக வேண்டிய சூழலில் மழையும், காற்று அடித்ததால் நெற்பயிர் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. வேளாண் துறையினர் மழைக்காலத்தில் வயல்வெளி சென்று உரிய தொழில்நுட்ப மேலாண்மையை வழங்காததால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பாதிப்புகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வேண்டும். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உளுந்து மற்றும் பச்சைப்பயிறு தானிய விதைகளை தரமான முறையில் உரிய காலத்தில் வழங்க வேண்டும்.
சேலம்: தேவை அதிகரிப்பு, வரத்து குறைவு ஆகிய காரணங்களால், சேலம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. மார்கழி விரதம் காரணமாக, அனைத்து ஊர்களிலும் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. அதேவேளையில், மழை, பனிப்பொழிவு காரணமாக, தமிழகம், பிற மாநிலங்களில் காய்கறி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.அதனால் மாநிலம் முழுவதும் காய்கறி விலை உயர்வை சந்தித்துள்ளது. சேலத்தில் கடந்த வாரத்தில் கிலோ 15 ரூபாய்க்கு விற்ற நாட்டுத் தக்காளி நேற்று 22 ரூபாய்க்கு விற்றது. பெங்களூரு தக்காளி விலை, கிலோவுக்கு இரண்டு ரூபாய் அதிகரித்து, 24 ரூபாய்க்கு விற்கிறது.
கடந்த வாரம் கிலோ 18 ரூபாய்க்கு விற்ற உருளைக்கிழங்கு தற்போது 22 ரூபாய்க்கும், 14 ரூபாய்க்கு விற்ற கேரட் 16 ரூபாய்க்கும் நேற்று விற்பனை ஆனது. சென்ற வாரம் ஒரு ரூபாய்க்கு விற்ற முருங்கைக்காய் நேற்று இரண்டு ரூபாய்க்கு விற்றது. பச்சை மிளகாய் 10 ரூபாய்க்கு விற்றது கிலோ 12 ரூபாய்க்கும், பீட்ரூட் கிலோ 16 ரூபாய்க்கு விற்றது 18 ரூபாய்க்கும், சவ்சவ் கிலோ 25 ரூபாய்க்கு விற்றது 32 ரூபாய்க்கும் விற்கிறது.பீன்ஸ் வரத்து முற்றிலும் நின்று விட்ட நிலையில், தற்போது குளிர்பதன கிடங்குகளில் இருப்பில் இருந்த பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது. அவற்றின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பீன்ஸ் கிலோ 26 ரூபாய்க்கு விற்றது தற்போது 33 ரூபாய்க்கு விற்கிறது.
ஆலங்குடி: ஆலங்குடி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விதைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பகுதியில் கடலை சாகுபடி மிகவும் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற பகுதியாகும். ஒவ்வொரு முறையும் விதை கடலையை இருப்பு வைத்தும், அவ்வபோது வெளிசந்தையில் விதை கடலையை வாங்கி விதைக்கப்படுகிறது. தற்போது பெய்த மழையால் நிலங்களை உழுது விதைக்க விதைக்கடலை வெளிச்சந்தையை விட அரசு மையங்களில் குறைந்த விலைக்கும், தரமானதாகவும் கிடைக்கும் என்பதால் பருவமழை ஓய்ந்தும் அரசு வேளாண் மையங்களில் விதை கடலை மற்றும் இதர தானிய வகை விதைகள் வாங்க விவசாயிகள் குவிந்தனர்.
ஆனால், விதைகள் தற்போது இருப்பு இல்லை. பின்னர் வந்தவுடன் தருகிறோம் என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு போன்ற இதர பகுதி விவசாயிகள் அலைக்கழிக்கபடுவதால் சில விவசாயிகள் அதிக விலைகொடுத்து வெளிசந்தையில் விதைகளை வாங்கி விதைத்தனர். விவசாயிகள் சாகுபடிக்குத் தயாராக உள்ள போதே அரசு தடையின்றி கடலை மற்றும் தானிய விதைகள் வேளாண் மையங்களில் போதிய இருப்பு வைத்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
இந்தியாவில் விவசாயம் அதிகளவில் உள்ளது என அரசு அறிவித்தும் தற்போது நல்ல மழை இருந்தும் அரசு தரமான விதை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை தேவையென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எதிர்பார்த்த காலத்தில் மழை பெய்யாத போதிலும், விவசாயிகளுக்கு அடுத்த இடி, "மாவுப் பூச்சி' தாக்குதல் மூலமாக வந்தது. வழக்கமாக ஏக்கருக்கு 12 முதல் 15 டன் வரை மரவள்ளி விளைச்சல் கிடைக்கும். மாவுப் பூச்சி தாக்குதலால் வெறும் ஐந்து டன்னாக உற்பத்தி குறைந்தது. தமிழகத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் முதன் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் சத்தி, டி.என்.பாளையம், நம்பியூர் மற்றும் கோபி பகுதியில் பரவியது. குறிப்பாக மரவள்ளி, பப்பாளி மற்றும் மல்பெரி இலைகளில் மாவுப் பூச்சி தாக்குதல் அதிகளவில் இருந்தது. ஏற்கனவே பருவமழை தவறியதால் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்த மரவள்ளி பயிர், மாவுப்பூச்சி தாக்குதலால் மேலும் நிலை குலைந்தது. ஒரு மாதமாக அறுவடையாகி வரும் மரவள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து 28 சதவீதத்துக்கு பதிலாக வெறும் 18 சதவீதமே உள்ளது. மாவுச் சத்து குறைந்த மரவள்ளிக்கிழங்கு மூலம் தரமான ஸ்டார்ச் தயாரிக்க முடியாது. இதனால், " சேக்கோ' ஆலைகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே மரவள்ளிக் கிழங்கை கொள்முதல் செய்தன.
மரவள்ளிக் கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதனால், 28 சதவீதம் மாவுச்சத்துள்ள மரவள்ளிக் கிழங்குக்கான தேவை அதிகரித்துள்ளது.
நவம்பர் மாதம் தரமான மரவள்ளிக் கிழங்குக்கு டன் 3,500 ரூபாய் விலை கிடைத்தது. டிசம்பருக்கு பின் விலை படிப்படியாக உயர்ந்து 5,000 ரூபாயை எட்டியுள்ளது. நவம்பர் வரை ஈரோட்டில் மஞ்சள் விலை தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்தது. இதுபோல், மரவள்ளிக் கிழங்கின் விலை தற்போது படுவேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால், தரமான கிழங்கு இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மாவட்டத்தில் மாவுப்பூச்சி தாக்குதல் தென்பட்டவுடன், பட்டு வளர்ச்சி துறை மூலம் மல்பெரி விவசாயிகளுக்கு இலவச பூச்சிக் கொல்லி மருந்து வழங்கப்பட்டது. மல்பெரி செடிகள் ஓரளவு தப்பின. ஆனால், மரவள்ளிக் கிழங்கில் ஏற்பட்ட பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்த வேளாண் துறை அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் 60 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக காபி தளிர்கள் உலர்த்துவதில் பிரச்னை காணப்படுகிறது. வெளிர் நிறம் கிடைக்காமல் தளிர்கள் கருப்பாக மாறி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி,அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காபி சீசன் துவங்கி,பழங்கள் பறித்து பல்பர் மூலம் அரைத்து உலர்த்தி விற்பனைக்கு தயார்படுத்தும் பணி நடக்கிறது. மழை, கடும் பனிப்பொழிவால் காபி தளிர்களை உலர்த்துவதில் பிரச்னை உள்ளது.கடந்த 15 நாட்களாக வெயில் இல்லாததால் காபி தளிர்களை உலர்த்த வைக்க முடியாமல் வீடுகளின் பரண்களில் காயவைத்துள்ளனர்.ஒரு கிலோ.,காபி கொட்டை விலை துவக்கத்தில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டது. தற்போது வெளிர் நிறமான காபி தளிரை பக்குவப்படுத்துவதில் பிரச்னை இருப்பதால் தளிர்கள் கருப்பாக மாறி வருகிறது.இதனால் போதிய விலை கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்ச நிலை விவசாயிகளிடையே காணப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் அணைகள் நிரம்பின.அதே நேரத்தில் குளங்கள், கண்மாய்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக அவ்வப்போது தூறல் மழை பெய்தது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மட்டும் கனமழை பெய்ததால்,பழநி தாலுகாவில் உள்ள மாவட்டத்தில் பெரிய அணையான பாலாறு, பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி அணைகள் இரண்டாவது முறையாக நிரம்பி வழிகின்றன.ஒட்டன்சத்திரத்தில் உள்ள பரப்பலாறு அணையும், வத்தலக்குண்டில் உள்ள மருதாநதி அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது.
நத்தத்தில் குறைவு: மாவட்டத்தில் எப்போதும் அதிகளவு மழை பெய்யும் பகுதியான நத்தத்தில் இந்தாண்டு எதிர்பார்த்த மழையில்லை. வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழையில்லாமல் உள்ளது. கடந்தாண்டு உடைந்த குடகனாறு அணையில் நீர் வரத்து சுத்தமாக இல்லை.
கிணறுகளில் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்தாலும், கண்மாய், குளங்களுக்கு பெரிய அளவில் நீர் வரத்து இல்லாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் காலை முதல் மழை தொடர்ந்து பெய்வதால் குளிர்ந்த காற்று வீசுகிறது.நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விபரம் (மி.மீ.,யில்) : நிலக்கோட்டை -2.4, திண்டுக்கல் -15.5, நத்தம்-11, பழநி-22, ஒட்டன்சத்திரம் -23, சத்திரப்பட்டி-27, வேடசந்தூர் 13.5, கொடைக் கானல் போட் கிளப்-24.2, அப்சர்வேட்டரி-27.10.பாலாறு-77, குதிரையாறு-118, வரதமாநதி-136.
விடிய விடிய மழை:பாலாறு-பொருந்தலாறு அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர்வரத்துள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றப்படுகிறது.அணையின் மொத்த உயரமான 65 அடியும் நிரம்பி வழிகிறது. வரதமாநதி அணையின் மொத்த உயரம் 67 அடி. அணை நிரம்பி வழிகிறது.வினாடிக்கு 875 கன அடி நீர்வரத்தும், அதே அளவு வெளியேற்றமும் உள்ளது. குதிரையாறு அணையின் மொத்த உயரம் 80 அடி. நேற்றைய நீர்மட்டம் 76.45 அடி. வினாடிக்கு 133 கன அடி நீர்வரத்தும், 133 கன அடி நீர் வெளியேற்றமும் உள்ளது.
விவசாயிகள் கவலை:தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தொடர் மழை பெய்வதால் கிணறுகளின் நீர்மட்டம்,நிலத்தடி நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது. அதேசமயம் இப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கில் விதைகள் உதிர துவங்கியுள்ளன.இதனால் வரும் நாட்களில் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் தொடங்க வேண்டிய பருவமழை தாமதமாக நவம்பர் துவங்கி இரண்டு கட்டங்களாக மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்திலும் வழக்கத்துக்கு அதிகமாகவே மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய வறண்ட வானிலையைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகியது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அரியலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்: அரியலூர் 24 மி.மீ., செந்துறை 32 மி.மீ., ஜெயங்கொண்டம் 20 மி.மீ., திருமானூர் 17 மி.மீ., மாவட்டத்தில் பெய்த சராசரி மழையளவு 23.25 மி.மீ., ஆகும்.
தியாகதுருகம் : கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர் வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் வெறும் தூரல் மட்டும் பெய்தது. இப்பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாண்டு தென் மேற்கு பருவமழை எதிர் பார்த்தபடி பெய்யாததால் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையும் தாமதமானதால் சம்பா சாகுபடி செய்வது கேள்விக்குறியானது. இந்நிலையில் தாமதமாக துவங்கிய வடகிழக்கு பருவமழை நவம் பர் மூன்றாவது வாரத்தில் பரவலாக மழைபொழி வை கொடுத்தது.
தியாகதுருகம், ரிஷிவந் திம் பகுதி ஏரி, குளங்கள் பாதியளவே நிரம் பின. இதனால் ஏரிபாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலையடைந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் உருவான "வார்டு' புயல் காரணமாக மழை தொடர வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்ததால் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத் திருந்தனர்.
இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட "வார்டு' புயலால் கடந்த நான்கு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. தியாகதுருகம், ரிஷிவந்தியம் பகுதியில் மூன்று நாட்களும் தூரல் மழை மட்டுமே பெய்தது. வலுத்து மழை கொட்டாததால் சாலைகளில் குட்டையாக தேங்கி நிற்கும் அளவிற்கே மழை பெய்தது. இதனால் மண்ணின் ஈரப்பதம் அதிகரித்ததே தவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைக்கு செல்லும் அளவிற்கு மழை பெய்யவில்லை. புயல் கரையை கடந்த வேளையில் மட்டும் சற்று கனமழை பெய்தது. இதனால் எதிர்பார்த்த அள வுக்கு ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கவில்லை.
வங்ககடலில் உருவாகும் புயல் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் கரையை கடப்பது வழக்கம். "வார்டு' புயல் தமிகழத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்ததால் விழுப்புரம் மாவட் டத்தில் கனமழை பெய் யும் என்று விவசாயிகள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத் திருந்தனர். ஆனால் தூரல் மழையுடன் முடிவுக்கு வந்ததால் ஏரி, குளங்கள் நிரம்பி வழியும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற் றமே ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் உருவான புயலால் விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை கிடைத்தது. அதேபோல் அடுத்த புயல் உருவாகும்போதாவது, எதிர் பார்த்த மழை கிடைக் குமா? என்று விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக் கின்றனர்.
ராஜபாளையம் : விவசாய நிலப்பகுதியில் பம்ப் ஷெட் இயக்குவதற்கான மும்முனை மின்சாரம், குறைந்த நேரமே வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
ராஜபாளையத்திற்கு மேற்கே அய்யனார் கோயில், ஆறாவது மைல், சம்மந்தபுரம், செண்பகத்தோப்பு, மருங்கூர், வடக்கு வெங்காநல்லூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை, மாந்தோப்புகள் உள்ளன. கண்மாய்களையொட்டி உள்ள பகுதிகளில் பரவலாக நெல் மற்றும் கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியாக இருப்பதால் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் கிணறுகளில் தண்ணீர் இருக்கும். கடந்த மாதம் வரை முழுமையான மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இருவாரங்களாக நகர் பகுதியில் உள்ளது போல், வயல்காட்டுப் பகுதியிலும் மறைமுக மின்வெட்டை மின்வாரியம் அமல்படுத்தியுள்ளது.
அதாவது பம்ப் ஷெட்டை இயக்குவதற்கு தேவையான மும்முனை(திரி பேஸ்) மின்சாரத்திற்கு பதிலாக இருமுனை(டூ பேஸ்) மின்சாரம் மட்டுமே 18 மணி நேரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 6 மணி நேரம் மட்டுமே மும் முனை மின்சாரம், அதுவும் காலை, மதியம், இரவு என முறை வைத்து வினியோகிக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் பம்ப் ஷெட்டை இயக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயத்திற்கான வேலை ஆட்கள் பற்றாக்குறை உள்ள காலத்தில், நாளொன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குவதால், குறிப்பிட்ட நேரத்தில் பணியாளர்களை வரவழைப்பது சிரமமாக உள்ளது. மேலும், இப்பகுதிகளில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால், இரவில் வேலை செய்ய யாரும் முன் வருவதில்லை. எனவே, இரவு நேரத்தில் வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை பயன்படுத்த இயலவில்லை. அனைத்து விவசாய நிலப் பகுதிகளுக்கும் பகல் நேரம் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செஞ்சி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பொன்னி நெல் பயிர்கள் தொடர் மழையால் நிலத் தில் சாய்ந்தன. செஞ்சி பகுதியில் பருவமழை கால தாமதமாக பெய்ததால் வழக்கத்தைவிட சம்பா நடவு குறைந் தது. இதில் நடவு செய்த பொன்னி நெல் பயிர்கள் கதிர் முற்றி அடுத்த சில நாட்களில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் நெல் பயிர்கள் நிலத் தில் சாய்ந்தன. ஒரு பகுதி நெல் கதிர்கள் தரையில் இருந்த தண்ணீரில் நனைந்து முளைவிடும் நிலைக்கு சென்றன.
கதிர் முற்றும் பருவத்தில் பூச்சி தாக்குதலை தடுக்க விவசாயிகள் பூச்சி மருந்து தெளிப்பது வழக் கம். தற்போது பயிர்கள் நிலத்தில் சாய்ந்து இருப்பதால் நிலத்தில் நடந்து சென்று மருந்து தெளிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. மருந்து தெளித் தாலும் அடிப்பகுதி வரை மருந்து பரவாமல் மேலே படர்ந்துள்ள கதிர்கள் கூடுபோல தடுத்து விடும்.
இதனால் அடிப்பகுதியில் சிக்கி உள்ள நெற்கதிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு நெல்லின் தரம் குறையும் என விவசாயிகள் கூறுகின்றனர். அத்துடன் மகசூலும் குறையும் என்பதால் செஞ்சி பகுதியில் பொன்னி நடவு செய்திருந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
போடி, சிலமலை, மணியம்பட்டி, சூலப்புரம், ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் தட்டைப்பயறும், பிஞ்சு பருவத்தில் மொச்சையும் உள்ளன. தற்போது குளிர், பனிப் பொழிவு அதிகரித்துள்ளதால் பயிர்களில் பச்சைக் காய்ப்புழு மற்றும் புருனியா காய்ப்புழுவின் தாக் குதல் காணப்படுகிறது.
விவசாய உதவி இயக்குநர் ஜெகப்பிரியாபதி கூறுகையில்; காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்த எண்டோசல்பான் 35 இ.சி, 2 மில்லி, கார்பரில் டபிள்யூ 50% , பாசலோன் 35 இ.சி., 2 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செடிகள் நன்கு நனையுமாறு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். உயிரியல் பூச்சி கொள்ளி மருந்துகள் மூலம் காய்ப்புழுவை கட்டுப்படுத்த எக்டேருக்கு 250 மில்லி என்.பி.வி., கரைசலை 200 லிட்டர் நீரில் கலந்து பயிர்கள் நன்கு நனையும் வகையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். போடி வட்டார விவசாய விரிவாக்க மையத்தில் போதுமான பூச்சிகொல்லி மருந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் மிக குறைந்த ஆண்டு சராசரி மழை (500 மி.மீட்டருக்கும் கீழ்) பெறும் மாவட்டங்களின் வரிசைப்பட்டியலில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. இதனால், இங்குள்ளவர்கள் விவசாய தொழில் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறமுடியவில்லை. எந்தவொரு தொழில் வளர்ச்சிக்கும் நீர் ஆதாரமே முக்கிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் விவசாயம் மட்டுமல்லாது பிற தொழில்களிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாத நிலையே நீடிக்கிறது. இதனால்தான் இந்தியாவில் உள்ள 45 வறட்சி மாவட்டங்களின் வரிசைப்பட்டியலில் டாப் டென்னில் ராமநாதபுரம் இடம் பெற்றுள்ளது.
இந்தநிலையில், அரசு மானியத்துடன் கூடிய பருவ நிலை பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் முதல் கட்டமாக விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வரிசையில் ராமநாதபுரத்தையும் சேர்த்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஈரோட்டில் கிரியேட் அறக்கட்டளை சார்பில், வேளாண் நிகழ்ச்சி நடந்தது. முதலில் "வேளாண் அங்காடிகள் பயாளிகள் பார்வையில்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. வேளாண் அங்காடிகள் மேம்பாட்டு மன்ற தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். கிரியேட் அறக்கட்டளை தலைவர் துரைசிங்கம் முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் அம்பலவாணன், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன், அறக்கட்டளை அறங்காவலர் பொன்னம்பலம் ஆகியோர் பேசினர்.
பின்னர் "அங்காடிகள் தற்போதைய கட்டமைப்புகளும், பிற வசதிகளும் ஓர் விழிப்புணர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. பொருளாளர் நல்லசாமி, திருத்துறைபூண்டி கிரியேட் பயிற்சி இயக்குனர் ஜெயராமன், சிதம்பரம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். "வருங்கால வேளாண் அங்காடிகள்' என்பது குறித்து, தமிழ்நாடு அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வர்த்தக சம்மேளனத்தின் ஆலோசகர் ஜெகதீசன், தர்மபுரி தனசேகரன், திருப்பூர் கோவிந்தராஜன், கர்நாடகமாநிலம் கிருஷ்ணபிரசாத் ஆகியோர் பேசினர்.
"அரிசி உற்பத்தி முதல் நுகர்வு வரை பிரச்னைகளும், சவால்களும்' என்ற தலைப்பில், கருத்தாய்வு நடந்தது. ஈரோடு மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வர்த்தக சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பயன்படும் வகையில், வேளாண் அங்காடிகளை மேம்படுத்த வேண்டும். வேளாண் அங்காடி தொடர்பான வெளியீடுகளை வெளியிட வேண்டும். வேளாண் அங்காடி மேம்பாட்டுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் அங்காடிகளை நிர்வாகித்தல் ஆகியவற்றை தேவைப்படுபவர்களுக்கு வழங்க வேண்டும்.
இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருட்களுக்கான சந்தையை உருவாக்க வேண்டும். பாரம்பரிய விவசாய முறைகளையும், விதைகளையும் உயிர்பிக்க வேண்டும். மரபணு மாற்றுமுறை விவசாயம் மற்றும் அதனால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வேளாண் அங்காடிகள் மேம்பாட்டு மன்ற செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.
அதனால், கரும்பு அறுவடைக்கு இயந்திரங்களை மாவட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் விவசாயிகள் என வலியுறுத்தினர். அதை ஏற்ற சர்க்கரை துறை கமிஷனர், தர்மபுரி கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு ஆலைக்கு இரண்டு கரும்பு அறுவடை இயந்திரம் வாங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, இரண்டு இயந்திரம் வாங்குவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக கரும்பு விவசாயிகளுக்கு, சாகுபடி நிலத்தில் கரும்பு வெட்டும் இயந்திரம் பயன்படும் முறை குறித்தும், இயந்திரங்கள் பயன்படுத்தி கரும்பு அறுவடை செய்ய வசதியான சாகுபடி முறை குறித்தும் கோட்ட வாரியாக அதிகாரிகள் செயல்விளக்கம் அளிக்க உள்ளனர்.இயந்திரங்களை பயன்படுத்த அகலப்பார் முறையில் ஐந்து அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்திட வேண்டும். தற்போது விவசாயிகள் இரண்டரை அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்கின்றனர். அவர்கள், ஒரு பாரிட்டு ஒரு பாரை எடுத்து மற்ற வரிசையில் இடைவெளி விட்டு அகலப்பார் முறையில் மாற்றி கரும்பு சாகுபடி செய்யலாம்.அகலப்பார் முறையில் சாகுபடி செய்வதற்கு, கோட்ட அலுவலகங்கள் மூலம் முன் அறிவிப்பு செய்து செயல்முறை பயிற்சி விளக்க கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அந்தந்த பகுதி கரும்பு விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.பயிற்சி விளக்க கூட்டங்கள் குறித்தும், சாகுபடி முறை குறித்த சந்தேகங்களையும் விவசாயிகள் கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.
கோபாலபுரம் ஆலைப்பகுதி தலைமை கரும்பு அலுவலர் குணசேகரனை 9442591234 என்ற மொபைல் எண்ணிலும், அரூர் வடக்கு கரும்பு அலுவலர் கதிரவனை 9442591222 என்ற எண்ணிலும், அரூர் தெற்கு கரும்பு அலுவலர் கேசவனை 9443407305 என்ற எண்ணிலும், மொரப்பூர் கரும்பு அலுவலர் ஞானப்பழனியை 9442591080 என்ற எண்ணிலும், பொம்மிடி கரும்பு அலுவலர் சரவணனை 9442591235 என்ற எண்ணிலும், பாப்பிரெட்டிப்பட்டி கரும்பு அலுவலர் விஜயகுமாரை 9442591259 என்ற எண்ணிலும், கோபிநாம்பட்டி கரும்பு அலுவலர் கோகிலாவை 9442591277 என்ற எண்ணிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.கரும்பு சாகுபடியில் கரும்பு அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவை செய்து அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகள், கரும்பு அலுவலர்கள் செயல்முறை பயிற்சி விளக்க கூட்டங்களில் கலந்து கொண்டு அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை கேட்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
மங்களூர், நல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த கிராமங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, மல்லி, மணிலா, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி, மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. அனைத் தும் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையினால் மானாவரி பயிர் கள் முற்றிலுமாக அழிந்துள்ளன. மக்காச் சோள கதிர்கள் முளைப்பு விட்டுள்ளன. பருத்தி காய்கள் கருகி வீணாகியுள்ளன. இதேபோன்று பிற பயிர்களும் அழுகியுள்ளதால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் வேளாண்துறைக்கு தேவையான களையெடுக்கும் கருவிகள் 12 ஆயிரத்து 500 ரூபாய் மானியத்திலும், சீன மாடல் நெல் நடவு இயந்திரம் 75 ஆயிரம் ரூபாய் மானியத்திலும், 10 ஹெச்.பி., களையெடுக்கும் கருவி 50 ஆயிரம் ரூபாய் மானியத்திலும், பழ மரங்களுக்கான விசை தெளிப்பான 20 ஆயிரம் ரூபாய் மானியத்திலும், நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான நெல் அறுவடை மற்றும் மக்காச்சோள அறுவடை இயந்திரங்கள் 33 சதவீத மானியத்திலும், வழங்கப்படுகின்றன. நீர்வள நிலவள திட்டத்தின்கீழ், ஆனைவாரி ஓடை உபவடிவ நிலப்பகுதி ஏரியின், ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் அமைக்கப்படும் தெளிப்பு நீர் பாசன அமைப்பிற்கு, 65 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
சிறு பாசன திட்டத்தில் விசை துளைக்கருவி, நில பௌதீக ஆய்வு கருவி, கைத்துளை கருவி போன்றவை வாடகைக்கும் விடப்படுகிறது. செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் செயல்படுத்த அரியலூர் மாவட்டத்துக்கு, 19.20 லட்சம் ரூபாய் வரப்பெற்று, 18 லட்சம் ரூபாய் மதிப்பில் 36 பண்ணைக்குட்டைகளும், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு ரீசார்ஜ் சாப்ட்களும், அரியலூர் பஞ்.,யூனியனில் அமைப்பதற்காக பணிகள் நடக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு, நெல் சாகுபடி 21 ஆயிரத்து 227 ஹெக்டேர் பரப்பளவிலும், கரும்பு விவசாயம் ஏழாயிரத்து 69 ஹெக்டேர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் ஆறாயிரத்து 990 ஹெக்டேர் பரப்பளவிலும், பயிறு வகைகள் 853 ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்வதன் மூலம், கடந்த ஆண்டை விட அதிக அளவில் விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 274.99 டன் மெட்ரிக் டன் விதை நெல்லும், 9.548 மெட்ரிக் டன் சிறு சிறு தானியங்களும், 5.537 மெட்ரிக் டன் பயிறு வகைகளும், 34.151 மெட்ரிக்டன் நிலக்கடலையும், விதை விநியோகம் செய்யப்பட்டு, அரியலூர் மாவட்டத்துக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்கு ஏற்ற உரங்களும் வேளாண்மைதுறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் யூரியா 769 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி., 253 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 451 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 73 மெட்ரிக் டன்னும் இருப்பு உள்ளன. இவற்றை விவசாய பெருமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.விவசாயிகளின் முதன்மை கோரிக்கையான மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அரியலூரில் இயங்க, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் காப்பீட்டு திட்டம் குறித்து அலுவலர்கள் கூட்டம், விவசாயிகள் குறைகள் அடிப்படையில் சிறப்பு கூட்டமாக நடத்தப்படும்.
÷கோவையில் ஆங்காங்கே வணிக நிறுவனங்களும், பெரிய வணிக வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன. அதே சமயம், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புறநகர்ப் பகுதியில் புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. இதனால், நாளுக்கு நாள் கட்டுமானப் பொருள்களின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக, செங்கல் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர் கட்டட பொறியாளர்கள்.செங்கலின் தேவை அதிகரிப்புக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் உள்ளனர்.
சுரண்டப்படும் மண்: கோவையை அடுத்த ஆனைகட்டி பகுதியில் இயங்கும் 50 சிறிய மற்றும் பெரிய செங்கல் சூளைகள்தான் செங்கல் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்தச் சூளைகளில் இருந்து தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
÷மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெட்டி எடுக்கப்படும் களிமண்தான் செங்கல் உற்பத்திக்கு பிரதான மூலப் பொருள். மலையோரப் பகுதி மற்றும் பட்டா நிலங்களில் இருந்து களிமண் எடுக்க கனிம வளத் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த அனுமதியை பெறும் செங்கல் சூளை உரிமையாளர்கள், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஆழத்துக்கு களிமண்ணை வெட்டி எடுத்து விடுகின்றனர். இதனால், சின்னத்தடாகம் ஊராட்சியையொட்டியுள்ள மலையோர பகுதிகளில் 20 அடி ஆழத்துக்கு ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதாளத்தில் நிலத்தடி நீர்: மேல்புறத்தில் உள்ள மண் தொடர்ந்து சுரண்டப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என எச்சரிக்கை செய்கின்றனர் நீரியல் விஞ்ஞானிகள்.
÷மழை பெய்யும்போது தேங்கும் நீரானது, நிலத்துக்குள் செல்கிறது. அந்த நீர், நிலத்துக்கு அடியில் ஓடையாக ஓடுகிறது. அந்த நிலத்தடி நீரைத்தான் நாம் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் வெளியே கொண்டு வந்து உபயோகப்படுத்துகிறோம்.
மேல்புறத்தில் இருக்கும் மண் தொடர்ந்து வெட்டி எடுக்கப்படுவதால், மழைநீர் நிலத்துக்கு அடியில் செல்வதற்கு பதில் வழிந்தோடிவிடுகிறது. இதே நிலை தொடர்ந்தால், நிலத்தடி நீர் மட்டம் நாளடைவில் பாதாளத்தை நோக்கி சென்றுவிடும் என்கிறார் மத்திய நிலத்தடி நீர் வாரிய விஞ்ஞானிகள்.
÷இந்த வாரியம் சார்பில் கோவையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. தொண்டாமுத்தூர், தடாகம், சின்னத்தடாகம் பகுதிகளில் நிலத்தடி நீர் உபயோகம் அதிகரித்துள்ளதும், அதே சமயம், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
"வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் மண் வெட்டி எடுக்கப்படுவதால், மண்ணில் உள்ள ஈரப்பதத்தின் அளவு குறைந்துவிடும். இது நேரடியாக வனப் பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். இதனால், அப் பகுதியே மரங்களற்று பாலைவானம் மாறும்' என்கின்றனர் நீரியல் நிபுணர்கள்.
÷உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகத் திகழும் மண் தொடர்ந்து சுரண்டப்படுவதை மாவட்ட வருவாய்த் துறையினரும், கனிம வளத் துறையினரும் தடுக்க வேண்டும் என்பதே இயற்கையை நேசிப்போரின் கோரிக்கை.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிóன் செயலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமை வகித்து ஜி.சந்தானம் பேசியது:
ஒரே கிராமத்தைச் சேர்ந்த, விவசாயம் அல்லது அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மிகச்சாதாரண ஏழை, எளிய மக்களால் உருவாக்கப்படுவதே உழவர் மன்றம். இம்மன்றத்தினர் வங்கிக் கடன் மூலம் தங்களது வாழ்க்கைத் திறனை உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும் கடன் மூலம் மேம்பாடு என்ற கொள்கையை பிறருக்கு எடுத்துக் கூறி, ஊரக வளமைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளலாம். கிராம மக்களுக்கும், வங்கிக்கும் இடையே உழவர் மன்றம் பாலமாக அமையும். ஒரு கிராமத்துக்கு ஒரு உழவர் மன்றமே போதுமானது. குறைந்தபட்சம் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் சேர்ந்து, ஒரு உழவர் மன்றத்தை உருவாக்கி, சேவை வங்கியோடு இணைந்து செயல்படலாம். மேலும் உழவர்கள் தமது விவசாயம் சார்ந்த செய்திகளை பகிர்ந்து கொள்ளவும், ஊரக வளர்ச்சிக்கு உதவவும் 1982-ல் நபார்டு வங்கியால் உழவர் மன்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் செயல்பாட்டுக்கு நபார்டு வங்கி நிதி உதவி வழங்குகிறது என்றார்.
மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவ.முத்துக்குமாரசாமி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ப.லோகநாதன், முதன்மை வருவாய் அலுவலர் சீ.மலர்விழி, பொதுமேலாளர் என்.இளங்கோ, ஈரோடு சரக துணைப்பதிவாளர் ஜி.காந்திநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க 27-வது மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாட்டில் பாசன வசதி பெற்ற நிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலம் மின் இணைப்பு மூலம் பாசனம் பெறுகின்றன. 2 ஆண்டுகளாக அமல்படுத்தப்படும் மின்வெட்டால் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கூட விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால் பல லட்சம் ஏக்கர் நிலம் தரிசாக மாறியுள்ளன.
மாற்றுப்பாசன ஆதாரங்கள் இல்லாததால் திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந் நிலையில், அரசு மின்வாரியத்தை மூன்றாகப் பிரிக்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது கிராமப்புற மின் வழங்கல் மற்றும் மின்பராமரிப்பை பாதித்து விவசாயம் கேள்விக்குறியாக மாறும் நிலையை உருவாக்கும்.
எனவே மின்வாரிய சீரமைப்பு நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும். இதுவரை செயல்பட்டது போலவே இனியும் தமிழ்நாடு மின்வாரியம் செயல்பட வேண்டும். விவசாயத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். ஏற்கெனவே மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் கே.பாலபாரதி எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசினார். மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார். மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்து என்.ஆர்.ராமசாமி பேசினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கே.வரதராஜன், மாநிலத் தலைவர் ஜீ.வீரய்யன், மாநிலச் செயலர் ஆர்.சந்திரா, மார்க்சிய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் என்.பாண்டி உள்பட பலர் பேசினர்.
செண்டுப்பூ விலை 1 கிலோ பத்து ரூபாய்க்கு விற்கப்பட்டது. கூலிக்கே பணம் கிடைக்காததால், விவசாயிகள் வெறுப்படைந்து இப் பூக்களை குப்பையில் கொட்டினர். இதுபற்றி விவசாயி கணேசன் கூறியதாவது:
செண்டுப் பூவைப் பறிக்க, மார்க்கெட் கொண்டு வர நிறைய செலவாகிறது. தற்போதைய விலையைக் கணக்கிட்டால், நஷ்டம்தான் வரும். எனவேதான், வெறுப்படைந்து சில விவசாயிகள் செண்டு பூக்களைக் குப்பையில் கொட்டியுள்ளனர் என்றார்.
ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களும் பயன்பெறத் தக்க வகையில் டிச. 23-ம் தேதி காலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், மேற்படி திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற்றுள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள் திருமணத்திற்கான உதவித்தொகை, விபத்து மற்றும் இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை கோரி மனு செய்யலாம் என கூறியுள்ளார்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் மனுச் செய்து நிதியுதவி பெறாமல் இருப்பவர்கள், இத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெறாமல் விடுபட்டவர்கள் மற்றும் புதிதாக உறுப்பினர் அடையாள அட்டைகள் பெறுவதற்கு மனுச்செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடுமுடி பேரூராட்சியின் குருக்கள் தெருவில் சுமார் 25 சென்ட் இடத்தில் தினசரி மார்க்கெட் அமைந்துள்ளது. இதில் இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், விவசாயிகளும் தேங்காய்,பழங்கள், கீரைகள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட தங்கள் விளை பொருட்களை கொண்டுவந்து விற்பனை செய்துவந்தனர்.
இந்நிலையில் சில காலமாக மார்க்கெட் பகுதிக்குள் தேங்கும் குப்பைகள் அகற்றப்படாமல் போனதால் மலை போல் தேக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வார்டு கவுன்சிலர், பேரூராட்சித் தலைவர் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் வேறு வழியில்லாமல் தெருவின் இருபுறமும் அமர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் தெருப்புழுதி படிந்த பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர். மேலும் இத்தெருவைக் கடந்து காவிரி ஆறு மற்றும் மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோவிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தெருவில் நடைபெறும் வியாபாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்க்கெட்டில் பொருட்களை வாங்க வரும் பெண்கள் கூட்ட நெரிசலின் இடிபாடுகளுக்கிடையே அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டும் எவ்விதப் பலனுமில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
பேரூராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு மார்க்கெட் வியாபாரத்திற்காக சுங்க வசூல் நடைபெறுகிறது. இதில் அரசு விதிப்படி தலைச்சுமைக்கு ரூ.1-ம், சைக்கிளுக்கு ரூ.2-ம் மார்க்கெட்டிற்குள் ஸ்டாலில் கடைகள் வைத்துக்கொள்ள ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆணால் ஏலதாரர்கள் பேரூராட்சியின் முத்திரை இல்லாத சீட்டைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக அணைவரிடமும் ரூ.5ஐ வசூலித்து வருதாக விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், நாங்கள் அப்படித்தான் வசூல் செய்வோம் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடுங்கள் என்று கூறுகின்றனர். இதுகுறித்து செயல் அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சாலை ஒரத்தில் போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக காவல் நிலையத்தில் வழக்கு போட்டு விடுவதால் நீதிமன்றத்தில் அபராதமும் செலுத்தி வருகிறோம் என்றார் சிறு வியாபாரி பொன்னம்மாள். ஏலதாரருக்கு அதிக தொகையும் கொடுத்துவிட்டு, நீதிமன்றத்தில் அபராதமும் செலுத்தி சாலைப்புழுதியில் அவதிப்பட்டு வருகிறோம் என்றார் விவசாயி தங்கவேல்.
இதுபோன்ற பிரச்னைகள் தொடர்பாக செயல் அலுவலரிடம் உடனுக்குடன் நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க பலமுறை முயற்சித்த போதும் வெளியூரிலிருந்து அவர் வந்து செல்வதால் அலுவலகத்தில் அவரை சந்திப்பதில் சிரமம் ஏற்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் தெரிவித்தார்.
பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் குறைகளைப் போக்க மார்க்கெட்டிற்குள் வியாபாரம் நடைபெற மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே வரி செலுத்துவோர் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று அணைக்கு 610 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி ஷட்டர்கள் திறந்து, வரத்து நீர் 610 கன அடி தண்ணீரும் ஆற்று வழியாக வெளியேற்றப்பட்டது. ஆற்றின் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் 11 அணைக்கட்டுகள் வழியாக விவசாய பாசன வசதியை பெறுகிறது. அணையில் மொத்த கொள்ளளவும் எட்டியதால் கோமுகி அணை இளநிலை பொறியாளர் கணேசன், ஊழியர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஆலைகளில் பதியும் கரும்புகளை தனியார் ஆலைகளுக்கு அனுப்புவதை தடுக்க, அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். கரும்பு பதிவதிலிருந்து வெட்டு ஆர்டர் வரை காசு கொடுத்தால் தான் காரியம் நடக்கும் நிலை, அரசு ஆலைகளில் உள்ளது. அரசு ஆலையில் பதியும் கரும்பிற்கு, 12 மாத விளைச்சலுக்கு பின்னரே கட்டிங் ஆர்டர் தருகின்றனர். தனியார் ஆலைகளில் எட்டு மாத விளைச்சல் போதும் என வாங்கிச் செல்கின்றனர். இதனால், இரண்டு ஆண்டுகளில், மூன்று முறை விளைச்சல் (மறு தாம்பு) கிடைத்து விவசாயிகளுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. அரசு ஆலைகளுக்கு அனுப்பும் கரும்பு வெட்டு கூலி ஆள் பிரச்னை, விவசாயிகளுக்கு தலைவலியாக உள்ளது. ஒரு டன் கரும்பு வெட்ட கூலி 400 ரூபாய் முதல் 600 வரை செலவாகிறது. வாகன வாடகை ஆலை நிர்வாகம் தந்தாலும், லோடு மாமூல் ஒவ்வொரு முறையும் டிரைவருக்கு 300 ரூபாய் தர வேண்டும்.தனியார் ஆலைகள் மூலம் கரும்பு வெட்டும் போது, விவசாயிகளுக்கு எந்த கவலையும் இல்லை. வயலை காண்பித்தால், அவர்களே வெட்டி எடுத் துச் செல்கின்றனர். எந்த செலவும் இல்லாமல் ஒரு டன்னிற்கு 1,500 ரூபாய் கையில் கிடைக்கிறது.அரசு ஆலைகளில் பதியும் கரும்புக்கு வங்கி கடன், உரம் கடனாக கிடைப்பதால் மட்டுமே அரசு ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதாக விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
கொழுப்பு சத்து குறைவான காளான் உணவில் புரதம், மாவு, நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் அதிகளவு இருப்பதால், மக்களிடம் வரவேற் பை பெற் றுள்ளது.காளான் களில் நியாசின் என்ற விட்டமின் கள் அதிகளவு உள்ளதால், பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். கொழுப்பு, சக்கரை நோய் பாதித்தவர் கள் காளான் உணவுகளை சாப் பிட்டால் நல்லது என, டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர்.விழுப்புரம் மாவட் டத்தில் முதன் முதலாக காளான் பண்ணையை கடந்த 2004ம் ஆண்டு, திண் டிவனம் கோட்டைமேட் டைச் சேர்ந்த அக்பர் என்பவர் அமைத்தார். இவரது பண்ணையில் சிப்பி, பால் காளான்களை இயற்கை முறையில் வளர்த்து, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் ராணிப் பேட்டை, ஆற்காடு, வேலூர், சென்னை பகுதிகளுக்கும் தினமும் அனுப்பி விற்பனை செய்கிறார். காளான்சூப், பிரியாணி, சப்பாத்தி, காளான் 65 என பல சுவையான உணவுகளை தயாரித்து தினமும் விற்பனை செய்கிறார்.இவரது பண்ணையில் சிப்பி காளான்கள் கிலோ 120 ரூபாய்க்கும், பால் காளான்கள் கிலோ 150க் கும் விற்கிறார். இதில், பால் காளான் கள்தான் அதிக அளவு விற்பனை செய்யப்படுகிறது.காளான் கள் வளர்ப்பில் முன்னுரிமை காட்டி வரும் அக்பருக்கு, கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி, கோயம் புத்தூரில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், "வேளாண்மை செம்மல்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தேயிலைத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் தடுப்புச் சுவர் உட்பட பிற கட்டுமானப் பணிகளுக்கு, மாநில அரசின் நிதியுதவி கிடைக்கும் வகையில் திட்டம் இருந்தது.மீண்டும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மண் வளம், நீர் வளம் பாதுகாக்கவும், தடுப்புச் சுவர் அமைக்கவும், அரசு உதவி செய்ய வேண்டும்.மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குன்னூர் - ஊட்டி சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் இருந்து தேயிலைத் தூளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல கூடுதல் செலவாகிறது; மழையால் தேயிலை, காபி தோட்டங்களில் 4 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, ஜித்தன் பரிக் கூறியுள்ளார்.
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அக்கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியினர் விவசாயம், கால்நடை வளர்ப்பை நம்பி ஜீவனம் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கல்யாணி அதன் சுற்றுவட்டாரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. விவசாயத் தொழில் நசிவு காரணமாக விளைநிலங்களை விவசாயிகள் ஒரு சிலர் தானாக வந்து விற்பனை செய்கின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் சிலர் விவசாயிகளை மிரட்டி, அவர்களது விளை நிலங்களை விலைக்கு வாங்குவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி கல்யாணி பஞ்சாயத்து அதன் சுற்றுவட்டாரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்கள் சமீபத்தில் வாங்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும், பலரது நிலங்களை வாங்குவதற்கு முன் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அக்ரிமெண்ட் போடப்பட்ட விளைநிலங்களைச் சுற்றிலும் யாரும் செல்ல முடியதாபடி பள்ளம் தோண்டி வைத்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறுகையில், ""கல்யாணி கிராமத்தில் உள்ள பலரது விளைநிலங்களை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவோர் விலைக்கு வாங்கி வருகின்றனர். நிலம் தர மறுக்கும் விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக நிலம் வாங்கப்படுகிறது. அவ்வாறு வாங்கப்படும் நிலங்களை சுற்றி நான்குபுறமும், பெரிய பள்ளங்களை தோண்டி விடுகின்றனர். ""இதனால் அருகில் உள்ள விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு குடிநீர் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற தொடர் இடர்பாடு காரணமாக பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களது நிலங்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் நிலை ஏற்படுகிறது. ""இப்பிரச்னை சம்மந்தமாக கல்யாணி பஞ்சாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுசத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளோம். அதுபோல் வருவாய் துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. எனினும், இருதரப்பினரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகின்றனர். ""இந்நிலை நீடித்தால் விவசாயம் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்படும். போதிய மழைப்பொழிவு இல்லாததால் விவசாயம் நலிவடைந்து வரும் இச்சூழலில், விளைநிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்கள் பெற்று வீட்டுமனைகளாக மாற்றி வருவது வருங்கால சந்ததியினருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்,'' என்றனர்.
ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல், நுண்ணூட்டமிடுதல், உயிர் உரமிடுதல் குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. விவசாயி முருகேசன் நிலக்கடலை வயலில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு பற்றி விளக்கப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் சுகுமார், ராஜேந்திரன், செல்வராஜ், பழனிச்சாமி ஆகியோர் செய்தனர்.
நிர்வாகம் அறிவித்துள்ள மானியம் நடவு கரும்பிற்கு அதிகமாகவும், கட்டை கரும்பிற்கு குறைவாகவும் உள்ளது. அதிக டன் கரும்பு வெட்டும் விவசாயிகளுக்கு குறைந்த தொகையும், குறைந்த டன் கரும்பு வெட்டும் விவசாயிகளுக்கு அதிக தொகையும் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அறிவித்துள்ள மானிய தொகையினையும், கரும்பு விலை ரூ. ஆயிரத்து 610 என்பதையும் திரும்ப பெற்று அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரி விலை கிடைக்கும் வகையில் டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிறுவனம் ஓராண்டாக 800 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்துடன் இயங்கி வந்தது. இத்துறை அமைச்சராக அழகிரி பொறுப்பேற்ற பின், நூறு நாள் செயல் திட்டத்தில் இந்த நிறுவனத்தை சேர்த்தார். 166 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கினார். எம்.பி.,க்கள் கோரிக்கையை தொடர்ந்து யூரியா உற்பத்தி செய்ய டன் ஒன்றுக்கு 3070 ரூபாய் மானியமாக உயர்த்தி தர உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2009 ஆகஸ்ட் முதல் நவம்பர் முடிய 17 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதனால் இந்த உரத்தொழிற்சாலை புதிய உத்வேகம் பெற்றுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் முடக்கப்பட்ட இந்த நிறுவனம், விவசாயிகளிடையே பெரும் மதிப்பை பெற்ற விஜய் 17:17:17, விஜய் 20: 20:0:13 காம்ப்ளக்ஸ் உர உற்பத்தியை மீண்டும் இந்த ஆண்டே துவங்க, 4,000ம் டன் யூரியா, பாஸ்பாரிக் அமிலம், அம்மோனியம் சல்பேட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் எம்ப்ளாயீஸ் புராக்ரசிவ் யூனியன் தலைவர் ஜெயசங்கர், பொதுசெயலாளர் சந்திரசேகர் கூறுகையில், ""மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஆறாவது ஊதிய குழுவின் சம்பளத்தை பெற்றுவிட்ட நிலையில் இந்நிறுவனத்திலும் ஊதிய உயர்வு அமல்படுத்த வேண்டும். என்.பி.எஸ்-3 உரக்கொள்கை மானியத்தை 2006 அக்டோபர் முதல் 2009 மார்ச் வரை அமல்படுத்த வேண்டும். இங்கு பணியாற்றிய 1800 பேரில் தற்போது 829 பேர் மட்டுமே பணியாற்றி சாதனை புரிந்துள்ளனர். மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பினால் கூடுதலாக 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்,'' என்றனர்.
மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் ந.மதிவாணன் தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையிலும் இந்தக் குறைதீர்க் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் புத்திசிகாமணி பேசியது:
பெரியாறு பிரதான கால்வாய் மூலம் பாசன வசதி பெரும் இருபோக பாசன நிலங்களில் 2-ம் போகத்துக்கும், ஒருபோக பாசன நிலங்களுக்கும் கடந்த 10}ம் தேதி முதல் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளுக்கு உரிய முறையில் பொதுப் பணித் துறையினரால் தகவல் அளிக்கப்படவில்லை.
இதனால், கடைமடைப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நாற்றுப் பாவ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் மூலம் பாசன நீர் திருடப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இதற்கு, சம்பந்தப்பட்ட விவசாயிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துமாறு பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் ந.மதிவாணன் உத்தரவிட்டார்.
அதேபோல் மேலூர் விவசாயிகள் பேசுகையில், பெரியாறு பிரதான கால்வாயில் நீர் வரத்துப் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும், நகராட்சி மருத்துவமனையின் பிரசவ வார்டில் இருந்து வெளியேறும் கழிவுகளும் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுப் பணித் துறை மற்றும் நகராட்சி சார்பில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்டச் செயலர் கே.தேவராஜ் பேசுகையில், உரங்கள் குறித்த பட்டியல் உரக்கடைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உரங்கள் இருப்புக் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
உரக் கடைகளில் சோதனை மேற்கொள்ள வரும் வேளாண் அதிகாரிகள் குறித்து முன்கூட்டியே கடைக்காரர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கருமாத்தூர் பகுதியில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சோதனையில் முன்கூட்டியே தகவல் தெரிந்ததால் பல கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன என்றார்.
அதேபோல், நெல் கொள்முதல் உள்ளதுபோல் கொப்பரைத் தேங்காய்க்கான நேரடி கொள்முதல் மையம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேவுகப்பெருமாள், மின்சாரத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்டஅதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தலைமை வகித்தார்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் ஜி. கனகசபை பேசியது: "குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் உரிய அளவில் கிடைக்கவில்லை. தற்போது, அதிக அளவில் பெய்த மழையால் சம்பா பயிர்கள் சாய்ந்துவிட்டன. மேலும், பூச்சித் தாக்குதலும் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் நஷ்டமடையும் நிலை உள்ளது. எனவே, சம்பா நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1,800 விலை நிர்ணயிக்க வேண்டும்' என்றார் கனகசபை.
காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு மாவட்டத் தலைவர் புலியூர் அ. நாகராஜன் பேசியது:
"தொடர் மழை காரணமாக சம்பா பயிர்களில் நோய்த் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுப்பதற்கான யோசனைகளை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்' என்றார்.
பாரதிய கிசான் சங்க மாநிலப் பொதுச் செயலர் பி. அய்யாக்கண்ணு பேசியது:
"வங்கியில் விவசாயக் கடன் பெறுவதில் இடைத்தரகர்கள் பணத்தைப் பெற்று விவசாயிகளை ஏமாற்றிவிடுகின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை நின்றுவிட்டதால், வாய்க்கால்களில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
"மோசடி செய்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளரிடமும் அறிவுறுத்துகிறேன்.
டிச. 30}ம் தேதி வங்கியாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் பங்கேற்கிறார். எனவே, ஏதேனும் குறைகள் இருந்தால், விவசாயிகள் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்' என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம் பேசியது:
"விவசாயக் கடன்களுக்கு 7 சதம் வட்டி என மத்திய அரசு அறிவித்தது. கடனை சரியான முறையில் கட்டினால் அதில் ஒரு சதம் குறைக்கப்படும் எனவும் அரசு குறிப்பிட்டிருந்தது. ஆனால், தற்போது வங்கிகளில் 10 சதம் வட்டி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியிலும் வட்டி விகிதம் வித்தியாசப்படுகிறது. ஒரே வட்டி விகிதம் நிர்ணயிக்க அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்' என்றார் ராஜா சிதம்பரம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அயிலை சிவ. சூரியன் பேசியது:
"காந்தி சந்தையில் விவசாயிகள் கொண்டு செல்லும் வாழைத் தாரை ஏலம் விடும்போது வியாபாரிகள் தர்மக் காசு பிடிக்கின்றனர். இதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தார் அடிப்படையில் ஏலம் விடுவதைத் தவிர்த்து எடை அளவில் விற்பனை செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்' என்றார் அவர்.
இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
"இந்த பிரச்னை தொடர்பாக கமிட்டி அமைத்து கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தர்மக் காசு பிடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடை அடிப்படையில் ஏலம் விடுவது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பிரச்னைகள் இருந்தால், இந்த கமிட்டியிடம் தெரிவித்து தீர்வு காணலாம்' என்றார். அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்க ஒருங்கிணைப்பாளர் என். வீரசேகரன் பேசியது:
"கூட்டுறவுத் துறையில் பயிர் கடன் பெறும்போது, இதர வங்கிகளில் கடன் இல்லா சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தப்படுகிறது. இதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு குறித்து மத்திய அரசின் தற்போதைய நிலை என்ன என்பதையும், புதிதாக அறிவித்துள்ள சட்ட வரைவு ஷரத்துகளையும் விவசாயிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்' என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் ந. பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த அமைப்பின் தலைவர் சே. நல்லசாமி இதைத் தெரிவித்தார்.
ஜனவரி 21ம் தேதிக்குள் கள் இறக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்காவிட்டால் செம்மொழி மாநாட்டுக்கு நெருக்கடி தருவோம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கால்நடை நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஆய்வாளர்கள் இரண்டு, மூன்று கிளை நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் தங்கள் மாடுகளுக்கு சினை ஊசி செலுத்த முடியாமலும், சிகிச்சை பெற முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற 2008 பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 1,800 கிளை கால்நடை நிலைங்களில் 888 நிலையங்கள்; கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டது. கால்நடை மருந்தகங்களில் பணியாற்ற, தேர்வாணையம் மூலம் கால்நடை உதவி டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. தரம் உயர்த்தப்பட்ட மருந்தகங்களிலும் உதவி டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.
பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் கால்நடை ஆய்வாளர்கள் பற்றாகுறை அதிகளவில் உள்ளது. மாடுகளுக்கு தடுப்பூசி போடுவது, சினை முட்டை செலுத்துவது உள்பட பல்வேறு சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. சீதோஷ்ண நிலை மாறும்போது கலப்பின மாடுகளை நோய் தாக்கும். நோய் தாக்கப்பட்ட மாடுகளுக்கு முதற்கட்ட சிகிச்சை கூட பெற முடியாமல் உள்ளது. மாடுகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாததால் பால் உற்பத்தி குறைந்து விட்டது. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பற்றாக்குறையால் மாடுகளின் இனம் குறைந்து வருகிறது. மனிதர்களை காப்பாற்ற அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் விடப்பட்டுள்ளது. பால் அத்தியாவசிய தேவை என்பதால் மாடுகளை காப்பாற்ற கால்நடை டாக்டர்களை அதிகப்படுத்த வேண்டும். தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள கால்நடை உதவி டாக்டர்களை விரைவில் நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கால்நடை மருத்துவமனை இணை இயக்குனர் தங்கவேல் கூறியதாவது: ஈரோடு, கோபி ஆகிய இரு பிரதம மருத்துவமனைகள், ஆறு கால்நடை மருத்துவமனை, 48 கால்நடை மருந்தகம், மூன்று நடமாடும் கால்நடை மருத்துவமனை, 59 கிளை நிலையங்கள் மாவட்டத்தில் செயல்படுகின்றன. ஈரோடு பகுதியில் உள்ள 34 கிளை நிலைங்களில் 25 ஆய்வாளர்கள், கோபி பகுதியில் உள்ள 25 கால்நடை கிளை நிலையங்களில் 10 ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர். கிளை நிலையங்களில் சினை ஊசி போடுவது, தடுப்பூசி போடும் பணி மற்றும் நோய் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்படும். மற்ற சிகிச்சைகள் மருத்துவமனை, மருந்தகங்களில் அளிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 28 கிளை நிலையங்கள் மருந்தகங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மருந்தகங்களுக்கு விரைவில் உதவி டாக்டர்கள் வருவர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத்தில் முக்கிய விவசாயப் பயிராக வாழை உள்ளது. சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. நேந்திரன், செவ்வாழை, ரொபெஸ்டா, கதலி உள்ளிட்ட வாழைகள் அதிகமாகப் பரிடப்படுகின்றன. இங்குள்ள காலநிலை, நீர்ப்பாசன வசதி ஆகியவை வாழைக்கு சாதகமாக உள்ளன. இவ் விவசாயத்தை முக்கியத் தொழிலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாழை எனப்படும் துளுவன் வாழைகளில் திடீர் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு வாழைகள் ஒடிந்து விழுகின்றன. ஒரு தோட்டத்தில் சுமார் 30 சதம் என்ற அளவில் இந் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில் முதலில் வாழையின் தண்டுப் பகுதியில் கோடுகள் விழுகின்றன. தொடர்ந்து தண்டுப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு, இறுதியாக இலைகள் ஒடிந்து சாய்கின்றன. மாவட்டத்தில் குலசேகரம் அருகே மலைவிளை உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட வாழைகள் உள்ளன.
செவ்வாழைகளை நட்டு பராமரித்து நேர்த்தியான அறுவடை செய்வதென்பது மிகவும் கடினமான செயல். இவ் வாழைகளுக்கு உரமிடுதல், நீர்ப் பாய்ச்சுதல், பூச்சிகொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை குறித்த காலத்தில் செய்தால் மட்டுமே அதிக வருவாய் பெறமுடியும்.
இதுகுறித்து இப் பகுதியைச் சேர்ந்த விவசாயி பி. ஹென்றி கூறியதாவது:
செவ்வாழையில் அதிக அறுவடை என்பது மிகவும் கடினமான பணி. இதற்கு அதிக பொருள் செலவும், அதிக உழைப்பும் தேவை. தற்போது மலைவிளை உள்ளிட்ட பகுதிகளில் நன்றாக செழித்து வளர்ந்து வந்த செவ்வாழைகளில் திடீர் பாதிப்பு ஏற்பட்டு அவை விழுந்து விடுகின்றன.
இப் பாதிப்புக்குக் காரணம் நுண்ணூட்டக் குறைபாடா அல்லது நோயா எனத் தெரியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாய, தோட்டக் கலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அகற்றும் ஆகாயத்தாமரையை கம்போஸ் உரமாக மாற்றுவதால், அது இயற்கை உரமாக மாறிவிடுகிறது. மேலும், இதை உரமாக மாற்றுவதால், பின்னர் இவை முளைக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. அல்லது எவ்வளவு தூரம் வெட்டினாலும், அவை குப்பையாக கொட்டப்படும் இடத்தில் மீண்டும் முளைத்துவிடும். வரும் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
100 ஹெக்டேரில் அறுவடைக்குத் தயாராக இருந்த முன்பட்ட சம்பா நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து விட்டன.350 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட இளநடவு சம்பா பயிர்களும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்து விட்டது. மீதமுள்ள சம்பா நெற்பயிர்களும் தொண்டை கதிர் பக்குவத்தில் உள்ளதால் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தொடர் மழை, விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் எற்படுத்தியுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அரசு ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இதே நிலை தான்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரராஜா என்பவர் கூறுகையில், " விவசாயிகள் அரசு விவசாய விரிவாக்க மையங்களில் தான் விதை நெல் வாங்கி நடவு செய்துள்ளனர். பருவம் தாண்டி பயிர் செய்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர். பயிர் செய்த விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
முத்துக்குமரன்(விவசாயி): புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கமாக பெய்யவேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதாலும், பருவம் தவறி மழை பெய்துள்ளதாலும் பயிர் சாகுபடி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்துக்கான தேதியை மேலும் நீட்டிக்கவேண்டும்.
ராகவன்(டி.ஆர்.ஓ.,): சம்பா நெல் சாகுபடிக்கு மட்டும் தான் டிசம்பர் 15ம் தேதியுடன் காப்பீட்டு தேதி முடிந்துள்ளது. இதர பயிர்களை 2010 ஜனவரி 15ம் தேதிவரை காப்பீடு செய்யலாம். காமராசு(விவசாயி): தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தென்னை மரங்களையும் இணைக்கவேண்டும். கேரளாவில் தென்னை மரங்கள் தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர்: இதுகுறித்து உரிய விசாரணை நடத்தியபின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.
ராமகிருஷ்ணன்(விவசாயி): இலுப்பூர் தாலுகா நிலையப்பட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து 800 ஏக்கர் விளைநிலத்தில் ஆண்டாண்டு காலமாக பயிர் சாகுபடி செய்துவரும் விவசாயிகளுக்கு அவரவர் நிலங்களுக்கு உண்டான பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்துவருகின்றனர்.
கலெக்டர்: பயிர் சாகுபடி செய்துவரும் நிலம் தனக்குத்தான் சொந்தம் என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்படும்.
ஆசைத்தம்பி(விவசாயி): கந்தர்வக்கோட்டை அடுத்த கல்லாக்கோட்டை கிராமத்தில் அண்மையில் திறக்கப்பட்ட "ஹால்ஸ் டிஸ்லரிஸ்' என்ற மதுபான கம்பனிக்குள் போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, திறன் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டும் பாதிக்குமா என்பது குறித்த முழு தகவல்களையும் மாவட்ட நிர்வாகம் வெளியிடவேண்டும்.
டி.ஆர்.ஓ.,: இதுகுறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டபின் தகவல் வெளியிடப்படும்.
கண்ணுத்துரை(விவசாயி): மாவட்டம் முழுவதும் இடைவிடாது பலத்த மழை பெய்தும் முத்துக்காடு கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வரத்துவாரிகள் மாயமானதால் தான் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது. வரத்துவாரிகளில் ஆக்ரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கசாமி(விவசாயி): வனத்துறையின் அனுமதியின்றி சந்தணம் மற்றும் வெண் தேக்கு மரங்கள் நடவு செய்யலாமா?
கலெக்டர்: மரங்கள் நடவு செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை. அவற்றை வெட்டுவதாக இருந்தால் அனுமதி பெறவேண்டும்.
முத்துக்குமரன்: கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உறுப்பினர்களாக சேர காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும்.
ராகவன்(டி.ஆர்.ஓ.,): மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காமராசு(விவசாயி): தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பிரிமியத் தொகை வாங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மறுத்துவருகிறது.
கலெக்டர்: எந்த வங்கி வாங்க மறுத்துள்ளது என்பதை குறிப்பிட்டு சொன்னால் அந்த வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலம் தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகை செலுத்தலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கரூரில் நடந்தது. தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார்.நாடார் பேரவை மாநில தலைவர் தனபாலன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வரும் ஜனவரி 21ம் தேதி சென்னையில் எங்களுடைய கோரிக்கை விளக்க மாநாடு நடக்கிறது. மாநாட்டில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், பூங்கோதை, கீதாஜீவன் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் தங்கபாலு பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 10 லட்சம் பனை, தென்னை தொழிலாளர் உள்ளனர். 60 லட்சம் விவசாய குடும்பம் தென்னையை நம்பியுள்ளது. கடந்த 25 ஆண்டாக தென்னை உற்பத்தி பொருளின் விலை உயரவேயில்லை. அதே சமயம் விவசாய கூலி, உரம் உள்ளிட்ட அனைத்து விலையும் பலமடங்கு கூடிவிட்டது.
கள் இறக்க அனுமதிப்பதால் 60 லட்சம் விவசாய குடும்பம், 10 லட்சம் பனை தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும். 10 கோடி தென்னை, ஐந்து கோடி பனை மரம் வெட்டப்படுவது தவிர்க்கப்படும். அரசின் சின்னமாக உள்ள பனை முற்றிலும் அழியும் நிலை மாறும். கள்ளை மதுபான பட்டியலில் இருந்து நீக்கி, உணவு பட்டியலில் சேர்த்து அனுமதிக்க கோரியுள்ளோம். கள் உற்பத்தி செய்து மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றமதிக்கான வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும். கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட கள் இறக்கும் போராட்டத்தை தொடர்ந்து, முன்னாள் நீதிபதி சிவசுப்பிரமணியன் கமிட்டி அமைக்கப்பட்டு தற்போது ஆய்வு முடிந்துள்ளது. அரசு அறிவித்தபடி ஆய்வு அறிக்கை ஆறு மாதகாலத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இதற்கான காலஅவகாசத்தை அரசுக்கு அளிக்க நினைத்துள்ளோம். கள் இயக்கம் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் தற்போது அறிவித்துள்ள கள் இறக்கும் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை.
பல ஆண்டாக நீடித்த எங்கள் கோரிக்கையான காமராஜர் நினைவு தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக மாநில அரசு தற்போது அறிவித்தது. அதே போல், 12 ஆண்டாக தொடரும் கள் இறக்கும் உரிமை கோரிக்கைக்கும் அரசு நல்ல முடிவு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மாநிலத்தில் அதிகம் படித்தவர் பட்டியலில் நாடார் சமுதாயத்தினர் இல்லை. எனவே, நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும். குறைந்தபட்சம் பனை தொழிலாளர்களையாவது இப்பட்டியலில் சேர்க்க வேண்டும் அல்லது ஜாதி வாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு முடிவெடுக்க வேண்டும்.எங்களுடைய கோரிக்கைக்கு தீர்வு காணப்படாவிட்டால், 2011ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் எங்களோடு கருத்து உடன்பாடு ஏற்படும் கட்சிகளுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மாவட்ட வாரியாக நடக்கும் தற்போதை கூட்டத்தில், "பூத் கமிட்டி' அமைக்கும் பணியையும் துவக்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது, மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ், தலைமை நிலைய செயலாளர் சிவகுமார் உடனிருந்தனர்.
வங்கக்கடலின் காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 50 மணி நேரத்துக்கு மேலாக பெய்யும் தொடர் மழையால், அனைத்து தரப்பு நெற்பயிர்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, வேளாண் துறையினர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சேர்ந்து ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 847 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம், செங்கிப்பட்டி பகுதியில் ஆறாயிரம் ஹெக்டேர் தற்போது நடவு முடிந்துள்ளது. 90 முதல் 100 நாள் கொண்ட நெற்பயிர்கள் பூக்கும் நிலையில் உள்ளவையும், அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளவையும், நீர் வடிய வழியில்லாத இடங்களில் உள்ள பயிர்களையும் பாதிக்கலாம். மேலும், மழை தொடர்ந்தால் பாதிப்பு அதிகமாகும். தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் தொடர்ந்து வடிவதால் குறிப்பிடும்படியான பதிப்பில்லை. முன்னதாக பயிர் செய்யப்பட்ட ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. மேட்டூர் மூடப்பட்டதால் நீர் வடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாகை, திருவாரூர் மாவட்டத்தில் முழுமையாக தூர்வாராததால் நீர் வடிவதில் பிரச்னை நீடிக்கிறது. இதனால், பெரும்பாலான வயல்களில் நீர் தேங்கி அனைத்து நிலை பயிர்கள் கீழ்புறத்திலும், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் நீரில் மூழ்கி அழுகியும், நீரில் மூழ்காமல் மழையில் நனைந்தவை முளைத்தும் காணப்படுகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் கடந்த ஒரு வாரகால தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைத்துவிட்டன. கடந்த நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்த மழையால் கட்டிமேடு, வடபாதி, பிச்சன்கோட்டகம், நெடும்பலம், மங்களநாயகிபுரம், தோத்ரியம் ஆகிய பகுதிகளில் இரண்டாயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா நடவு நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் அப்பகுதியில் உள்ள பயிர்கள் முற்றிலும் அழுகி நாசமாகிவிட்டது. தற்போது, அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் சிதம்பர கோட்டகம், சிதம்பரகொத்தமங்கலம், ஆட்டூர் ரோடு, அம்மனூர் ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கி உள்ளது. இதனால், நெற்கதிர்கள் முளைக்கத்துவங்கிவிட்டதால், விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வேதாரண்யம் பகுதியில் ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. வேதாரண்யம் பகுதியில் நேற்று காலை எட்டு மணி வரை 38 மி.மீட்டர் மழையும், தலைஞாயிறில் 138.8 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதனால், தலைஞாயிறு அரிச்சந்திரா நதி நிரம்பி வழிகிறது. இந்த நதியில் எந்த நேரமும் உடைப்பு எடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் கடல் பகுதியில் கடல் சீற்றம், கொந்தளிப்பால் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல, உப்பு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் மழையால் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், 20 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டிருந்த நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டத்தில் நேற்று காலை எட்டு மணி நிலவரப்படி திருப்பூண்டி 170 மி.மீட்டர், வல்லம் 144, மணல்மேடு 143, முள்ளியாறு 141, தஞ்சை 140, தலைஞாயிறு 136, நீடாமங்கலம் 127, அணைக்கரை 125, திருத்துறைப்பூண்டி 122, நாகை 120, பொறையாறு 114, பாண்டவையாறு 109, ஒரத்தநாடு 107, திருவாரூர் 107, முத்துப்பேட்டை 105, நன்னிலம் 103, சீர்காழி 100, மன்னார்குடி 93, குடவாசல் 91, அதிராம்பட்டினம் 84.8, கொள்ளிடம் 85, நெய்வாசல் தென்பாதி 84, கோரையாறு 82, திருவிடைமருதூர் 78, மஞ்சளாறு 76, அய்யம்பேட்டை 74, கும்பகோணம் 72, வலங்கைமான் 71, குருங்குளம் 69, மதுக்கூர் 69, பட்டுக்கோட்டை 67, பாபநாசம் 65, பேராவூரணி 58, நாகுடி 55, ஆயங்குடி 54, வெட்டிக்காடு 53, திருக்காட்டுபள்ளி 49.2, ஈச்சன்விடுதி 47, பூதலூர் 46, வேதாரண்யம் 38.2, கல்லணை 23.2, திருவையாறு 8 மி.மீட்டர் மழை பதிவானது. தஞ்சை மாவட்டத்தின் டிசம்பர் மாத சராசரி மழை 167.95 மி.மீட்டர். நேற்று முன்தினம் பெய்த சராசரி மழை 30.6 மி.மீட்டர், நேற்று 76.74 மி.மீட்டர் சராசரி மழை பதிவாகியுள்ளது.
வாய்க்காலில் மூதாட்டி பலி: வேதாரண்யம் வேதாமிர்த ஏரி நிரம்பி வழிகிறது. இதனால், இங்கிருந்து கடலுக்கு செல்லும் ஏரிவாய்க்காலில் மழை நீர் அதிகமாக செல்கிறது. நேற்று காலை இந்த வாய்க்கால் அருகே காலைக்கடன் கழிக்கச் சென்ற வேதாரண்யம் வடக்கு வடம்போக்கித் தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் கோவிந்தராசு மனைவி அபிராமி அம்மாள் (75) வாய்க்காலில் விழுந்து பலியானார். இவரது உடல் 100 மீட்டர் தூரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கருவைக்காட்டில் ஒதுங்கியது. வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியன், தாசில்தார் கருணாகரன் ஆகியோர் வேதாரண்யம் போலீஸில் புகார் செய்தனர்.